இலங்கையின் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை மற்றும் காலி ஆகிய 05 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழைவீழ்ச்சியானது 100 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் மண்சரிவு ஏற்படுவது தொடர்பிலான அறிகுறிகள் குறித்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)