இந்தியா

கர்நாடகா – காதல் பிரச்சினை… அண்ணன்,தம்பியை குத்தி கொலை செய்த பெண்ணின் தந்தை!

காதல் பிரச்சினையில் அண்ணன், தம்பியை பெண்ணின் தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெல்காமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சவுடத்தி தாலுகாவில் உள்ள பெல்காம் மாவட்டம் கரிமணி கிராமத்தைச் சேர்ந்தவர் யல்லப்பா ஹலேகொடி(22). இவரது சகோதரர் மாயப்பா ஹலேகொடி(20). இந்த நிலையில், துண்டனகோப்பாக கிராமத்தைச் சேர்ந்த ஃபக்கீரப்பாவின் மகளை யல்லப்பா காதலித்து வந்தார். இதற்கு ஃபக்கீரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தனது காதலியைத் தேடி அவரது வீட்டிற்கு யல்லப்பா அடிக்கடி சென்று வந்தார்.

இதைப் பார்த்த ஃபக்கீரப்பா, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், இன்று காலை இது தொடர்பாக யல்லப்பா ஹலேகொடிக்கும், ஃபக்கீரப்பாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் யல்லப்பாவை ஃபக்கீரப்பா சரமாரியாக குத்தினார். அப்போது தனது அண்ணனை ஃபக்கீரப்பா கத்தியால் குத்துவதை மாயப்பா ஹலேகொடி தடுத்தார். அப்போது அவரையும் ஃபக்கீரப்பா கத்தியால் குத்தினார். இதில் யல்லப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த மாயப்பாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டைக் கொலை வழக்குப் சம்பந்தமாக முரகோடா காவல் நிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட அண்ணன், தம்பி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தப்பியோடிய ஃபக்கீரப்பாவை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.காதல் விவகாரத்தில் அண்ணன், தம்பி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெல்காம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content