காலையில் தேன் குடிப்பது எடையைக் குறைக்க ஒரு ‘மேஜிக்’ தீர்வா? நிபுணர்கள் விளக்கம்!
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் காரியம், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது. இது பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்றாலும், இது உண்மையில் எடையைக் குறைக்கிறதா அல்லது இது ஒரு வெறும் நம்பிக்கையா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் சமீபத்திய ஆய்வுகள் கூறும் தகவல்கள் என்ன?
தேன் ஒரு இயற்கை இனிப்பு என்றாலும், அதில் சர்க்கரையை விடக் குறைவான கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) உள்ளது. காலையில் தேன் கலந்த நீரை குடிக்கும்போது, அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற (Detox) உதவுகிறது. மேலும், இது செரிமான மண்டலத்தைத் தூண்டி, வளர்சிதை மாற்றத்தை (Metabolism) சீராக்குகிறது.

இது உடல் எடையைக் குறைக்குமா?
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, தேன் நேரடியாகக் கொழுப்பை எரிப்பதில்லை. ஆனால், அது பின்வரும் வழிகளில் எடை குறைப்புக்கு மறைமுகமாக உதவுகிறது:
காலையில் தேன் குடிப்பது மூளையில் பசியைத் தூண்டும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, தேவையற்ற உணவுகளை உண்பதைத் தவிர்க்க உதவுகிறது.
மேலும் தேநீர் அல்லது கோப்பியில் சேர்க்கப்படும் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகத் தேனைப் பயன்படுத்தும்போது, உடலுக்குச் சேரும் தேவையற்ற கலோரிகள் குறைகின்றன.
ஆனால் தேனில் உள்ள இயற்கை குளுக்கோஸ் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அளிக்கிறது, இது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேன் ஆரோக்கியமானது என்றாலும், அதைப் பயன்படுத்தும் முறையில் சில கட்டுப்பாடுகள் அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தேனில் கலோரிகள் அதிகம். எனவே, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டிக்கு மேல் பயன்படுத்துவது எடையை அதிகரிக்கக்கூடும்.
அது மாட்டும் அல்லது தேனை ஒருபோதும் கொதிக்கும் நீரில் கலக்கக்கூடாது. மிதமான வெதுவெதுப்பான நீரில் கலப்பதே அதன் சத்துக்களைப் பாதுகாக்க உதவும்.
ஆயுர்வேதத்தின்படி, தேனைச் சூடுபடுத்துவது உடலில் நச்சுத்தன்மையை (Ama) உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.
காலையில் தேன் குடிப்பது மட்டும் எடையைக் குறைத்துவிடாது. முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியுடன் இதைப் பின்பற்றும் போது மட்டுமே சிறந்த பலனைப் பெற முடியும்.
குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேனைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும்.





