உலகம் செய்தி

48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த பணவீக்கம் – ட்ரம்ப் கருத்து!

தான் பதவியேற்றபோது நாட்டின் பணவீக்கம் 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது மளிகைப் பொருட்களுக்கான விலை குறைவடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

1.45 மில்லியனுக்கும் அதிகமான இராணுவ சேவை உறுப்பினர்களுக்கு “போர்வீரர் ஈவுத்தொகையாக  $1,176 டொலர் வழங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளார். குறித்த பணம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சராசரி பெட்ரோல் விலைகள் ஒரு கேலனுக்கு $2.50 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வீட்டு எரிசக்தி செலவுகள்  $3,000 குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி