செய்தி விளையாட்டு

சூர்யவன்ஷிக்கு ICC விதித்துள்ள தடை

வெள்ளிக்கிழமை Belfast டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் T20 போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைக்கவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), தனது முதலாவது சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்துள்ளார்.

இத்தொடரின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனியான உடைமாற்றும் அறையைப் (Changing Room) பயன்படுத்த வைபவ் சூர்யவன்ஷி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை Belfast டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் T20 போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை டர்ஹாமில் (Durham) தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் அவர் பங்கேற்கிறார்.

இதற்குமுன், சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது 205 நாட்களில் (1989-ல்) அறிமுகமானதே இந்திய சாதனையாக இருந்தது.

சூர்யவன்ஷி இப்போட்டியில் களம் காண்பதன் மூலம், 1996-ல் பாகிஸ்தான் அணி 14 வயதான ஹசன் ரசாவைத் தேர்வு செய்ததற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு அங்கீகாரம் பெற்ற நாடொன்றில் விளையாடும் மிக இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையைப் படைப்பார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் ஐசிசி (ICC) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) நேரடிக் கண்காணிப்பில் நடப்பதால், அவர்களின் “சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகள்” (Safeguarding Procedures) இங்கு அமுல்படுத்தப்படுகின்றன.

இரண்டு வாரியங்களின் விதிகளின்படி, 16 வயதுக்குட்பட்ட வீரர்கள் பெரியவர்களுக்கான உடைமாற்றும் அறையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் சூர்யவன்ஷிக்குத் தனி வசதிகள் செய்து தரப்படும்.

போட்டி நடைபெறும் நேரத்தில் இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறையில் இருக்கவும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவும் சூர்யவன்ஷிக்கு அனுமதி உண்டு. போட்டிகளுக்கு முன்னரும் பின்னரும் உடை மாற்றும் நேரங்களில் மட்டுமே இந்தத் தடை பொருந்தும்.

அவரது இளம் வயதைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொடர் முழுவதும் அவரது பெற்றோரும் அவருடன் பயணிக்க ஐசிசி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கமான விதிகளுக்குப் புறம்பாக அவர்கள் வீரர்களுடன் ஒரே ஹோட்டலில் தங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தனது 14-வது வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகையே வியக்க வைத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 38 பந்துகளில் சதம் அடித்து T20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 11 பந்துகளில் அதிவேக அரைசதம் கடந்து (List A) உலக சாதனை படைத்ததோடு, 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து இங்கிலாந்து தொடருக்கான தனது தயார்நிலையை நிரூபித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி