செய்தி

பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி சீனாவுக்குள் நுழைய அனுமதி

  • November 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி தமது நாட்டுக்குள் வருவதற்குரிய சலுகையை சீனா நீடித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இக்கொள்கை அமுலுக்கு வரும் எனவும், 2026 டிசம்பர் 31 ஆம் திகதிவரை அது நடைமுறையில் இருக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 32 ஐரோப்பிய நாடுகள் உட்பட 45 நாடுகளுக்குரிய மேற்படி விசா சலுகை காலாவதியான நிலையிலேயே சலுகை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 30 நாட்கள்வரை […]

உலகம் செய்தி

தாய்வான் மீது சீனா போர் தொடுத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

  • November 4, 2025
  • 0 Comments

தாய்வான் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்வான் மீது முற்றுகை நடவடிக்கையை சீனா ஆரம்பித்தால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சீன ஜனாதிபதி நன்கு அறிந்திருப்பார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். CBS செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாத்தியம் இல்லை. அதற்கான வாய்ப்பினை அமெரிக்கா ஒருபோதும் வழங்காது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் […]

இலங்கை

புலம்பெயர் தமிழ் குழுக்களை திருப்திபடுத்தும் அநுர அரசாங்கம் – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

  • November 4, 2025
  • 0 Comments

புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதக் குழுக்களை திருப்திபடுத்துவதற்காக புத்தாண்டுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தமிழ் பிரிவினைவாதக் குழுக்கள் ஆதரவு வழங்கின. மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அரசமைப்பின் 13 ஆவது […]

இலங்கை

சாதனை படைத்த இலங்கை சுங்கம் – இலக்கிற்கு மேலான வருமானம்

  • November 4, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை இலங்கை சுங்கம், செப்ரெம்பர் மாதத்திலேயே எட்டி விட்டதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்ரெம்பர் 30ஆம் திகதியுடன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேலாக, 117 சதவீத வருமானத்தை பெற முடிந்ததாக சுங்க அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,485 பில்லியன் ரூபா என்றும், அந்த செப்ரெம்பர் 30ஆம் திகதிக்குள் 1,737 பில்லியன்ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய மர்ம சத்தம் – பல வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

  • November 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நீரேந்துப் பகுதிகளில், மர்மமான மற்றும் பயங்கரமான வெடிப்புச் சத்தம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மெல்பேர்னில் உள்ள விக்டோரியாவின் கிழக்கு கிப்ஸ்லாந்தில் உள்ள பெய்ன்ஸ்டேல் மற்றும் ஏரிப் பகுதிகளில் இந்த சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பாரிய சத்தம் கேட்ட போது தமது வீடுகள் குலுங்கியதாகப் பலர் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்வுகள் பூகம்பத்தினால் ஏற்பட்டவை அல்லவென்றும், வானத்தில் இருந்து மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததாக மவுண்ட் டெய்லரைச் சேர்ந்த கெயில் என்பவர் […]

உலகம் செய்தி

காசாவில் பெரும் அவலம் – மயானங்களுக்குள் உயிருடன் வாழும் மக்கள் – வெளியான அதிர்ச்சித் தகவல்

  • November 4, 2025
  • 0 Comments

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசாவில், மயானங்களில் மக்கள் தங்கியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காசாவில் கடுமையான தாக்குதல்களால் கட்டடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்கியிருக்க போதுமான வசதிகள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. அமுலிலுள்ள காசா – இஸ்ரேல் போர் நிறுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த பாலஸ்தீன மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். எனினும் அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மயானங்களில் கொட்டகைகளை அமைத்து வாழ்ந்து […]

இந்தியா

பயணிகளின் உயிர்களுடன் விளையாடிய இந்திய விமானிகளால் பெரும் சர்ச்சை

  • November 4, 2025
  • 0 Comments

எயார் இந்தியா (Air India) விமான சேவையைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிமுறைகளை மீறி விமானப் பயணங்களில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சிரேஷ்ட விமானி ஒருவர், தனது ஆங்கில அறிவுத்திறமையை உறுதிப்படுத்தும் உரிமத்தைப் புதுப்பிக்காமலேயே விமானப் பயணங்களில் ஈடுபட்டுள்ளார். இந்தச் செயல்பாடு சர்வதேச விமானச் சேவைகளின் கட்டாய விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. அத்துடன் குறித்த விமானியுடன் துணை விமானியாகச் சேவையில் ஈடுபட்டவர் கட்டாயப் […]

உலகம்

சீனாவில் தங்கத்தை விழுங்கிய மகன் – அதனைப் பெற்றுக்கொள்ள தாயின் கடும் பிரயத்தனம்

  • November 4, 2025
  • 0 Comments

சீனாவில் தங்கத்தை விழுங்கிய மகனிடமிருந்து அதனைப் பெற்றுக்கொள்ள தாய் ஒருவர் முயற்சித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்துள்ளது. சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு மாநிலத்தில் குன்ஷான் (Kunshan) எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 11 வயதான சிறுவன் தவறுதலாக தங்கத்தை விழுங்கிய நிலையில், அதனைப் பெற்றுக்கொள்ள தாய் ஒருவர் ஒரு வார காலம் காத்திருந்துள்ளார். 10 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியைத் தாய் கொள்வனவு செய்து வைத்திருந்த நிலையில், அதனைச் சுவைத்துப் பார்க்க […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் மக்களை அச்சுறுத்தும் நோய் – சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

  • November 4, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் ஷிங்கிள்ஸ் (Shingles) எனப்படும் அக்கி நோய் காரணமாக அதிகளவான மக்கள் பாதிப்படைவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நோய்த்தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் வருடாந்தம் 30,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முன்னர் சின்னம்மை (Chickenpox) நோயால் பாதிக்கப்பட்டவர்களை, இந்த நோய் தாக்கும் போது அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் விமானப் பயண முன்பதிவால் சமூகக் கொடுப்பனவுகளை இழந்த மக்கள்

  • November 4, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விமானத்தைத் தவறவிட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தைகள் நலக் கொடுப்பனவு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிக்குச் சுற்றுலா மேற்கொள்ள விமான முன்பதிவைச் செய்திருந்த அந்தப் பெண், தவிர்க்க முடியாத காரணத்தால் விமானத்தைத் தவறவிட்டுள்ளார். உள்துறை அலுவலக எல்லைத் தரவை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், அந்தப் பெண் திட்டமிட்ட வகையில் ஒருவழிப் பயணமாக இத்தாலிக்குச் சென்றுவிட்டதாகத் தரவுகள் வெளிப்படுத்தியதால் இந்தக் கொடுப்பனவை நிறுத்தியுள்ளனர். கடந்த வருடத்தில் விமான முன்பதிவைச் செய்தபோதும், அவர் தற்போது வரையில் […]