துரதிர்ஷ்டவசமான மரணம்: பரிசுப் பணத்துடன் வீடு திரும்பியவருக்கு நேர்ந்த சோகம்
அதிர்ஷ்டம் கதவைத் தட்டிய அதேவேளையில், விதி அவரை அழைத்துச் சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று ஹொரண – பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆனந்தன் (வயது-44) என்ற ஒரு பிள்ளையின் தந்தை, அதிர்ஷ்டலாபச் சீட்டொன்றில் 10 இலட்சம் ரூபா பணப் பரிசை வென்றுள்ளார். அவருக்குச் சிங்கள மொழியில் எழுதத் தெரியாத காரணத்தினால், தனது நண்பரின் பெயரிலேயே அந்தப் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மிகுந்த […]













