பாதுகாப்பை மேம்படுத்த ஜெர்மனி இலக்கு – 10 பில்லியன் ஒதுக்கீடு!
ஜெர்மனி பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் (£8.5 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது.
அவசரநிலைகள் மற்றும் சாத்தியமான தாக்குதல்களுக்கான தயார்நிலையை மேம்படுத்துவதற்காக, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய முழு அளவிலான படையெடுப்பிற்குப் பதிலளிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட ஒரு பரந்த இராணுவச் செலவின இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடானது பெருமளவிலான உயிரிழப்புகளுக்கான மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், 1,000 சிறப்பு வாகனங்கள் மற்றும் 110,000 எடுத்துச் செல்லக்கூடிய கட்டில்களை வாங்குதல், மேலும் தங்குமிடங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




