பத்திர மோசடி : அதானி மீதான வழக்கை கைவிட தயாராகும் அமெரிக்கா!
இந்திய தொழில் அதிபரான அதானி மீதான குற்றவியல் மோசடி வழக்கை கைவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
பத்திர மோசடி, சதித்திட்டம் மற்றும் கம்பிவழி மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதானி, 18 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதானியும் அவரது மருமகன் சாகர் அதானியும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் இந்த சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஒப்பந்தம் நீதிமன்ற ஒப்புதலுக்கு உட்பட்டது எனவும், இதில் குற்றச்சாட்டுகள் ஒப்புக்கொள்ளப்படவோ அல்லது மறுக்கப்படவோ இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




