மலேசியாவில் தீ விபத்து: 200 வீடுகளுக்கு சேதம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (19) அதிகாலை இந்தத் தீ பரவியுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




