உச்சபட்ச வெப்பநிலை – மக்களின் கவனத்திற்கு!
நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு நாளை (20) ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அத்துறை குறிப்பிட்டுள்ளது.
எனவே, குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




