வட அமெரிக்கா

ஈஸ்டர் ஞாயிறு படுகொலை சம்பவம்; பெற்றோர்களால் பொலிஸில் சிக்கி கொண்ட சிறுவன் !

அமெரிக்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 13 வயது சிறுவனை பொலிசார் இறுதியில் கைது செய்துள்ளனர்.

ஜார்ஜியா மாகாணத்தில் LaGrange பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து ஏப்ரல் 9ம் திகதி 20 வயதான டவாரிஸ் லிண்ட்சே என்பவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் ,மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 13 வயதான ஜேடன் கன்ஸ்பி என்ற சிறுவனை பொலிசார் தேடியுள்ளனர்.

ஆனால் சிறுவன் ஜேடன் கன்ஸ்பி தலைமறைவான நிலையில், ஏப்ரல் 12ம் திகதி கைதாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 24ம் திகதி சிறுவன் ஜேடன் கன்ஸ்பி கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

சிறுவன் ஜேடன் கன்ஸ்பியின் குடும்பத்தினரே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content