ஈஸ்டர் தாக்குதல்கள் – 07 ஆண்டுகள் பூர்த்தி!
ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்து 7 ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவுக்கூறும் அஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெறவுள்ளன.
தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இன்று காலை ஒவ்வொரு தேவாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கத்தோலிக்க திருப்பலி தொடர்பு இயக்குனர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று காலை ஒவ்வொரு தேவாலயத்திலும் 2 நிமிட மௌன அஞ்சலி, மெழுகுவர்த்திகள் அல்லது எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஆராதனை நிகழ்வுகள் முன்னெடுக்கபடவுள்ளன.
இதற்கிடையில், கொச்சிக்கடேயில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில், மேன்மைமிகு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில் ஒரு சிறப்பு ஆராதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேவாலயத்தைச் சுற்றி ஒரு சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனை முடியும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.
கட்டுவபிட்டிய தேவாலயத்தில் ஒரு சிறப்பு ஆராதனையும் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், செபப் பவனி இன்று மாலை 4 மணிக்கு நீர்கொழும்பில் உள்ள மரிஸ்தெல்லா மைதானத்தில் ஆயர்கள், குருமார்கள், சமயகுருக்கள் மற்றும் பிறருடன் தொடங்கி, கட்டுவபிட்டியவில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலய வளாகத்தில் நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.





