ஐரோப்பா

விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க டச்சு அரசாங்கம் முடிவு

ஷிபோல் விமான நிலையத்தில் விமான இயக்கங்களின் இரைச்சலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை டச்சு அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.

சர்வதேச விமான நிலையத்தின் முக்கியத்துவத்திற்கும் வாழ்க்கைச் சூழலின் தரத்திற்கும் இடையில் சமநிலையை அடைய அதிகாரிகள் முயற்சிப்பதால், இந்ம நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

டச்சு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் செய்திக்குறிப்பின்படி, அமைச்சரவை திட்டத்தை ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் இது பற்றிய கருத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“விமான நிலையத்தைச் சுற்றி வாழும் மக்களுக்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டால், விமானப் போக்குவரத்து நெதர்லாந்திற்கு பல சிறந்த விஷயங்களைக் கொண்டுவருகிறது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஒலி மாசுபாட்டைக் குறைக்க 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நாங்கள் இன்று முன்வைக்கிறோம், ”என்று உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மை அமைச்சர் மார்க் ஹார்பர்ஸ் கூறினார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்