இலங்கை

டயானா தாக்குதல் விவகாரம்: இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

இந்த குழு இன்று கடைசியாக கூடியதாக அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு இடையில் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தினுள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற அறைக்கு வெளியே தன்னை தாக்கியதாகக் குற்றம் சுமத்தி சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவுக்கு எதிராக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content