ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சின்னங்களை பயன்படுத்திய ஆர்ப்பாட்டகாரர்கள்: 14 பேர் அதிரடியாக கைது!

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிஸ்புல்லா கொடிகள் பறக்கவிடப்பட்டதாக ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் தனது விசாரணையை புதுப்பித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதச் சின்னங்களைக் காண்பித்தது தொடர்பாக 14 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

90 மணிநேர சிசிடிவி ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் செனட் மதிப்பீடுகளின் விசாரணையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் “காசாவுக்கான தேசிய நடவடிக்கை தினத்தில்” ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஹிஸ்புல்லா கொடிகள் பறக்கவிடப்பட்டது யூத குழுக்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே விசாரணைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித