ஐரோப்பா

லண்டன் பொதுப் போக்குவரத்து அமைப்பு மீதான சைபர் தாக்குதல் – 02 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

கடந்த 2024 ஆம் ஆண்டு லண்டன் பொதுப் போக்குவரத்து அமைப்பின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி தாக்குதல் தொடர்பில் தல்ஹா ஜுபைர், 19, மற்றும் ஓவன் ஃப்ளவர்ஸ், 18, ஆகியோர் கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார அமைப்புகளில் ஒன்றான கலிபோர்னியாவின் சட்டர் ஹெல்த் தொடர்பான குற்றங்களுக்கும், SSM ஹெல்த் கேர் கார்ப்பரேஷனின் நெட்வொர்க்குகளில் ஊடுருவ மற்றவர்களுடன் சதி செய்ததற்கும் ஃப்ளவர்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (TfL) மீது குறித்த சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த சேவையை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்