செய்தி விளையாட்டு

CWC – வங்காளதேசம் இந்தியாவுக்கு எதிராக 257 ரன்களை இலக்காக நிர்ணயித்தது

உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த தௌஹித் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடி வந்த முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

மஹ்மதுல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 36 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 5 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content