ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் சரக்குகளுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பு
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் அனைத்து சரக்குகளுக்கும் அமெரிக்கா 20 சதவீதம் சுங்கக் கட்டணம் விதிக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் அமெரிக்காவை ‘ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலர்’ என்று அறிவித்ததோடு, இந்த சுங்கக் கட்டணம் ஒரு ஈடுசெய்தலாகச் செயல்படும் என்றும் கூறினார்.
மேலும், ஈரானியக் கப்பல்களோ அல்லது வாடிக்கையாளர்களோ ஜலசந்திக்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் வகையில், ‘ஈரானிய முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள தளங்கள் மீது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.




