உலகம்

ICC நீதிமன்றம் மீதான தடைகளை அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை  அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது.

அமெரிக்கர்கள், குறிப்பாக இராணுவத்தினரை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடர்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளுக்கு எதிரான தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதேபோல் தற்போது  பயணத் தடைகள், விசாக்களை ரத்து செய்தல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கு எதிரான தடைகளை அதிகரித்தல், மற்றும் பிற நாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுமாறு இராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து  வருவதாக வெளியுறவுத்துறையின் அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக, சர்வதேச சமூகத்தால் 2002 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்தி, அது அமெரிக்கர்களைக் குறிவைக்க முடியாது என்பதை உறுதி செய்ய ட்ரம்ப் தனது முதல் பதவி காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்