பிரான்ஸ் – புர்கினோ பசோ உறவில் விரிசல் : தூதரக உறவு முறிவு
பிரான்ஸ் உடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக புர்கினோ பசோ நேற்று அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பிரான்ஸ் இன்று அறிவித்துள்ளது.
பாதுகாப்பு, இறையாண்மை வெளிநாடு தலையீடுகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் விரிசலடைந்து வந்த நிலையில் தற்போது உறவை முறித்துக் கொண்டதாக புர்கினோ பசோ அறிவித்துள்ளது,
புர்கினா பாசோவின் தகவல் தொடர்பு அமைச்சர் கில்பர்ட் உட்ராகோ (Gilbert Ouedraogo) இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் “நாசகார வலையமைப்புகளையும்” “பயங்கரவாதிகளையும்” ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறியினும் இந்த குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் மறுத்துள்ளது.
மேலும் புரிகினோ பசோவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.




