இலங்கை செய்தி

கொள்ளுப்பிட்டியில் சர்ச்சைக்குரிய வாகன விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு நீதிமன்றம் தண்டனை

2019ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சாகர சரச்சந்திரவுக்குப் பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நவிந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது.

இதன்படி, பிரதிவாதிக்கு 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த உயர்நீதிமன்றம், அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டது.

இது தவிர, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் மனைவிக்கு 26 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10, 2019 அன்று கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதிச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசாகர சரத்சந்திர பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான நவிந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content