கருத்து & பகுப்பாய்வு

தினசரி பயன்படுத்தும் பல பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

தினசரி பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான பொருள்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சவர்க்காரம், ஷெம்போ எனும் முடியைக் கழுவும் திரவம் முதல் பாத்திரம் கழுவும் திரவம், சலவைக்குப் பயன்படுத்தப்படும் சவர்க்காரம் வரையிலான பொருள்களில் இரசாயனம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Environmental Science & Technology சஞ்சிகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

அமெரிக்காவின் California பல்கலைக்கழகம், Silent Spring Institute எனும் சுகாதார ஆய்வு அமைப்பு ஆகியவை California மாநிலத்தின் தகவல் தளங்களை ஆராய்ந்தன.

குறிப்பாக, காற்றில் எளிதில் வெளியாகக்கூடிய ரசாயனங்கள் (volatile organic compounds), புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் கொண்ட பொருள்கள் அடையாளம் காணப்பட்டன.

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பொருள்களில் உள்ள ரசாயனங்களுடன் மக்கள் பல முறை தொடர்பில் வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

அடையாளம் காணப்பட்ட பொருள்களில் பெரும்பாலானவை வீட்டில் வழக்கமாகப் பயன்படுத்தக்கூடியவை என்று The New York Times செய்தி நிறுவனம் சொன்னது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருளிலும் volatile organic compounds உள்ளதாகக் கூறப்பட்டது. அவை நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்படுவதுண்டு.

அத்தகைய ராசயனங்கள் பிள்ளைகளையும் கர்ப்பிணிகளையும் எளிதில் பாதிக்கலாம். நறுமணம் இல்லாத பொருள்களை மக்கள் நாடலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content