செய்தி தமிழ்நாடு

ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற தேர் திருவிழா

சென்னனை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4 ம் தேதி துவங்கியது.

நாள்தோறும் சிறப்பு பூஜைகள் கருடசேவை நடைபெற்ற நிலையில் ஏழாம்நாள் திருவிழாவாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ரங்கநாத பெருமாள் வீற்றிருக்க காலை திருநீர்மலை சுற்றியுள்ள பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் வடம்பிடித்து இழுந்து சென்றனர்.

திருநீர்மலையை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்த தேர் அடிவாரம் வரை வந்து நிலை நின்றது.

இதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு, மின்சார துறையினர் உள்ளிட்டோர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இறுதியாக 4000 நபர்களுக்கு பம்மல் புருஷோத்தமன், சொக்கலிங்கம், நரேஷ், மகேஷ், கணேஷ், வெங்கடேஷ், ஜீவா ஏற்பாட்டில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content