இலங்கை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் குறித்த விவாதத்தை நடத்தாமல் இருக்குமாறு கோரிக்கை!

வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில்இ எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விடயங்களை விவாதிப்பதால் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் இந்த விவாதத்தை நடத்தாமல் இருப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும்  என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

விவாதம் காரணமாக நட்டஈடு பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பாெறுப்பை சபாநாயகர் உட்பட பிரேரணையில் கலந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டபோது இ எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து பேசிய விஜயதாஷ ராஜபக்ஷ மேற்படி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  பாராளுமன்ற நடவடிக்கை சபாநாயகரினால் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்து ஒன்றரை மணி நேர்த்துக்கு பின்னர் மீண்டும் கூடியது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content