செய்தி

காஸாவில் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பு

காஸா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் திகதி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினர், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனர்.

இந்தச் சூழலில், ஹமாஸ் படையினர் கடத்திச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கட்டார் நாட்டின் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் படையினர் – இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட செய்தி:

“பிணைக் கைதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று இரவு முதல் 4 நாள்களுக்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கவுள்ளனர். அதுவரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும்.

மேலும், நான்கு நாட்களுக்கு பிறகு கூடுதலாக விடுவிக்கப்பட்டும் ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளுக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் செய்யப்படும்.

அதேசமயம், அனைத்து பிணைக் கைதிகளை திரும்பப் பெறவும், இஸ்ரேலுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content