அரசியல் இலங்கை செய்தி

தேசிய அரசமைப்பதற்கு ஏற்பாடு? இலங்கை அரசியலில் நடப்பது என்ன?

“தேசிய அரசாங்கம் அமைப்பதற்குரிய முயற்சி இடம்பெறுவதாக வெளியாகும் தகவல்கள் அப்பட்டமான பொய்யாகும்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு முயற்சி இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் நிமித்தமே மஹிந்த சமரசிங்க, தூதுவர் பதவியை துறந்து இலங்கை வருகின்றார் எனவும், ஹர்ஷ டி சில்வா போன்றவர்களுடன் பேச்சு நடத்தப்படுவதாகவும் சில இணைய ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பில் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

“ தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் பேச்சு நடத்தப்படவில்லை. இது நூறு சதவீதம் பொய்யான தகவலாகும்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எதிரணி தரப்பில் போலி தகவல்கள் பரப்படுகின்றன. அந்த தகவலிலும் உண்மை இல்லை.

சவாலை எதிர்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்குரிய இயலுமை எமக்குள்ளது.” என்றார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!