ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய அமெரிக்கா!! ட்ரம்பின் புதிய நகர்வு!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இப்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் வொஷிங்டனுக்கு சமாதானத் திட்டமொன்ற அனுப்பியதை தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு புதிய சமாதானத் திட்டத்தை அனுப்பிய பிறகு, ” ஈரான் மீதான தாக்குதலை நாங்கள் நடத்த மாட்டோம்.
ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், ஒரு நொடிப் பொழுதில் ஈரான் மீது ஒரு முழுமையான, பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுக்கத் தயாராக இருக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஈரானின் எண்ணெய் துறை மீதான தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




