பொழுதுபோக்கு

5 முன்னணி தமிழ் நடிகர்களுக்கு நடிப்பதற்கு அதிரடி தடை?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் ஐந்து நடிகர்களுக்கு தடை விதிக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேனாண்டாள் முரளி ’இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஐந்து நடிகர்கள் பட்டியல் தயார் செய்துள்ளதாகவும் கூறினார்.

இது குறித்து நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் பேச்சு வார்த்தைக்கு பின்னர் பழைய நிலை தொடர்ந்தால் அவர்கள் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டு அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, “சிலம்பரசன், விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா” ஆகியோர்தான் அந்த நடிகர்கள் என செய்திகள் வெளியாகி வருகிறது.

‘ஒத்துழைப்பு தரமாட்டோம்’ என்பதை சினிமா பாணியில், சங்கத்தின் பாணியில் ‘ரெட் கார்டு’ என்று சொல்வார்கள்.

திரையுலகத்தில் இதற்கு முன்பு இப்படி ‘ரெட் கார்டு’ கொடுத்து சிலரை பணியாற்றவிடாமல் தடுத்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content