உலகம்

நைஜரில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 308 பேர் பத்திரமாக மீட்பு

வடக்கு நைஜர் மற்றும் குவாரா மாநிலங்களில் ஆயுததாரிகளில் கடத்தப்பட்ட 308 பேரை நைஜீரிய பாதுகாப்புப் படைகள் பத்திரமாக மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கூட்டுப் பாதுகாப்புக் குழுவால் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை என்று ஜனாதிபதி போலா தினுபு (Bola Tinubu) விவரித்தார்.

மீட்கப்பட்டவர்களில் 163 பேர் குவாராவின் கயாமா மாவட்டத்தில் உள்ள வோரோ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், மேலும் 145 பேர் அண்டை மாநிலமான நைஜரிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு துப்பாக்கி ஏந்தியவர்கள் குவாராவின் சமூகத்தைத் தாக்கியதில் 170 பேர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்