337 மதிப்புமிக்க தொல்பொருட்கள் இத்தாலியிடம் ஒப்படைப்பு!
இத்தாலியிடமிருந்து கைப்பற்றப்பட்ட 337 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.
இந்நடவடிக்கையானது ரோம் மற்றும் வொஷிங்டனுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
பண்டைய ரோமானிய சிற்பங்கள் முதல் கிரேக்க, எத்ருஸ்கன் மற்றும் எகிப்திய கலைப்பொருட்கள் வரையிலான இந்தத் தொல்பொருட்களின் தொகுப்பு, இத்தாலியின் கராபினேரி கலாச்சாரப் பாதுகாப்புப் பிரிவின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
நியூயார்க் நகரை மையமாகக் கொண்ட நீண்ட தொடர் விசாரணைகளின் விளைவாக இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான ரோமானிய நாணயங்கள், நகைகள், பீங்கான் பொருட்கள் மற்றும் கட்டிடக்கலைத் துண்டுகள் ஆகியவை அடங்கும்.
முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகா அலெக்சாண்டரின் பளிங்குத் தலை (1960 இல் ஒரு ரோமானிய அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்டது) மற்றும் ஹெர்குலேனியத்திலிருந்து திருடப்பட்ட ஒரு வெண்கலச் சிலையும் இந்தப் பொருட்களில் அடங்கும்.
நியூயார்க்கின் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் இந்த நடவடிக்கைக்கு கணிசமாகப் பங்களித்துள்ளது,
இத்தாலிக்கான அமெரிக்கத் தூதர் டில்மன் ஜே. ஃபெர்டிட்டா (Tilman J. Fertitta), இத்தாலியின் தனித்துவமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும், இந்த மதிப்புமிக்க கலைப்பொருட்களை அவற்றின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கும் அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும் என்று கூறினார்.





