செய்தி தென் அமெரிக்கா

பெருவில் பஸ் விபத்துக்குள்ளானதில் 23 பேர் மரணம்

பெருவின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்-மத்திய ஆண்டிஸில் அமைந்துள்ள அயகுச்சோ பகுதியில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு பெருவியன் பொலிசார் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த 13 பேர் விபத்து நடந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

லாஸ் லிபர்டடோர்ஸ் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதாக நெடுஞ்சாலைப் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான ஜானி ரோலண்டோ வால்டெர்ராமா தெரிவித்தார்.

40க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, தலைநகர் லிமாவிலிருந்து அயாகுச்சோவுக்குச் சென்று கொண்டிருந்த பஸ் 656 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மேல் இருந்து விலகிச் சென்றதாக வால்டெர்ராமா தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி