ஐரோப்பா செய்தி

சாரா சுல்தானாவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை? ; சுவிஸ் தகவல் ஆணையம் அதிரடி பரிந்துரை

  • January 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய இடதுசாரி கட்சியான ‘யுவர் பார்ட்டி’ (Your Party) தலைவர்களுக்கு இடையிலான மோதல், தற்போது பொலிஸ் விசாரணை வரை செல்லும் சூழல் உருவாகியுள்ளது. கட்சியின் இணைத் தலைவரான சாரா சுல்தானா (Zarah Sultana), அனுமதியின்றி உறுப்பினர் சேர்க்கை இணையதளத்தை ஆரம்பித்து நிதி திரட்டியதாகக் கூறி, தகவல் ஆணையத்திடம் (ICO) புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தகவல் ஆணையம், இதில் ‘பாரிய குற்றவியல் நடவடிக்கைகள்’ (Serious Criminal Activity) இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதால், இது குறித்து […]

கருத்து & பகுப்பாய்வு

சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியா? வெனிசுலா மூலம் ஆட்டம் காட்டிய ட்ரம்ப்

  • January 10, 2026
  • 0 Comments

“வெனிசுலா” பொருளாதார நெருக்கடியா? அல்லது புவிசார் அரசியல் போர் மேடையா? வெனிசுலா நாட்டில் நிலவி வரும் பதற்றமான சூழலை வெறும் பொருளாதார நெருக்கடியாக மட்டுமே பார்க்க முடியாது. இது அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான நீண்டகால புவிசார் அரசியல் போட்டியின் ஒரு முக்கிய கட்டமாகவே கருதப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து, அரசியல் ரீதியாக அந்த நாட்டை பலவீனப்படுத்திய அமெரிக்காவின் நடவடிக்கை, அதன் பின்னணியில் உள்ள ஆழமான அரசியல் நோக்கங்களை மீண்டும் […]

இந்தியா

சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவுடன் கைக்கோர்க்கும் இந்தியா!

  • January 10, 2026
  • 0 Comments

சர்வதேச ரீதியில் வளர்ந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய அரசாங்கம் சீனாவுடன் கைக்கோர்க்க தேவையான முன்னாயத்தை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கமைய சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்த பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் அவசியமாகும். இதற்கிடையே தேசிய பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதா அல்லது ஓரளவு தளர்த்துவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு […]

ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் 40 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து: நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

  • January 10, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் புத்தாண்டு தினத்தன்று 40 இளைஞர்களின் உயிரைப் பறித்த தீ விபத்துக்காக நாடு முழுவதும் இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. விபத்து நடந்த விடுதிக்கு அருகிலுள்ள தேவாலயங்களில் நினைவேந்தல் வழிபாடுகள் நடைபெற்றதோடு, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் இத்தாலியத் தலைவர்கள் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, விபத்துக்குக் காரணமான ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) விடுதியின் உரிமையாளர் ஜாக் மொரெட்டி, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லலாம் என்ற அச்சத்தில் பொலிஸாரால் கைது […]

இலங்கை செய்தி

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

  • January 10, 2026
  • 0 Comments

கம்பளை – அம்புலுவாவ மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு சுற்றாடல் அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை மற்றும் ஆபத்துகளைக் கருத்திற்கொண்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து ஆராய விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதுடன், முறையான அறிக்கை கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க அனுமதி வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளின் […]

இலங்கை செய்தி

எனது கைது மக்களுக்கு அதிர்ச்சியை தந்தது ; விடுதலையின் பின் டக்ளஸ் உருக்கம்

  • January 10, 2026
  • 0 Comments

தன்னைத் திடீரெனக் கைது செய்தமை தனது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று பிணையில் விடுதலையான நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது விடுதலைக்காக உழைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் தீர்ப்பளித்த நீதவானுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் பல காரணங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அவர் தனது நன்றியைப் […]

இலங்கை செய்தி

கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல் இன்று முதல்

  • January 10, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது. புதிய கல்விச் சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 8 பேர் வைத்தியசாலையில்

  • January 10, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் விரிவுரையாளர் ஒருவரை மாற்றக்கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. விரிவுரையாளர் ஒருவரின் முறையற்ற நடத்தை மற்றும் உடல் ரீதியான கேலி கிண்டல்களுக்கு எதிராக கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. கடும் மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதில் மயக்கமடைந்த மற்றும் வாந்தி எடுத்த நிலையில் 8 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் […]

உலகம்

தைவானின் எதிர்காலம் சீனாவை பொறுத்தது – அந்தர்பல்டி அடித்த ட்ரம்ப்!

  • January 10, 2026
  • 0 Comments

தைவானின் எதிர்காலம் சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங்கைப் பொறுத்தது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நியூயார்க் டைம்ஸிடம் அளித்த பேட்டியில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனத் தலைவர் ஜி ஜின்பிங் (Xi Jinping) இராணுவ நடவடிக்கை மூலம் சுயராஜ்ய தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்தால், தான் “மிகவும் மகிழ்ச்சியடைய மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரோவின் அரசாங்கம் அமெரிக்காவிற்கு செய்ததாகக் கூறிய அதே வகையான அச்சுறுத்தலை தைவான் சீனாவிற்கு ஏற்படுத்தாததால், சூழ்நிலைகளை ஒத்ததாகக் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்ததற்கு எதிராக சோமாலியாவில் போராட்டம்

  • January 9, 2026
  • 0 Comments

சோமாலிலாந்தை(Somaliland) இஸ்ரேல்(Israel) தனி குடியரசாக அங்கீகரித்ததை எதிர்த்து சோமாலியாவின்(Somalia) தலைநகரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொகடிஷுவின்(Mogadishu) மையப்பகுதியில் உள்ள தலே(Taleh) சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. சோமாலியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு அதிகரித்துள்ளது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். சோமாலிலாந்தை ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அங்கீகரித்ததாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் சோமாலிலாந்து தலைநகரான ஹர்கீசாவுக்கு(Hargeisa) சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகும் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.

error: Content is protected !!