உலகம்

ஈராக்கில் பெரும் சோகம் – நாகரிகத்தின் தொட்டில் அழிவின் விளிம்பில்

  • November 16, 2025
  • 0 Comments

நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் ஈராக்கில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட பண்டைய நகரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான வறண்ட வானிலை, அப்பகுதி மண்ணின் உப்புத்தன்மையை அதிகரித்துள்ளது. இதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழல், பண்டைய கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட களிமண் செங்கற்களின் கட்டமைப்பை வேகமாகச் சிதைத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க […]

ஐரோப்பா

ஜெர்மனியில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி – அமுலாகும் கட்டுப்பாடுகள்

  • November 16, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள காட்டுப் பறவைகளில் H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நோய் பரவுவதைத் தடுக்க நகரம் புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல், பிராங்பேர்ட்டில் உள்ள அனைத்துக் கோழிகளையும் வீட்டிற்குள் அல்லது சிறப்பு பாதுகாப்பு உறைகளுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்ணைப் பறவைகளைப் பாதுகாக்கவும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கவும் நகரம் விரும்புவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கோழிகள், வாத்துகள் மற்றும் பிற […]

இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றுச் சாதனை – ஜனாதிபதியின் செலவுகள் குறித்த குற்றச்சாட்டு

  • November 16, 2025
  • 0 Comments

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் முதல் அமர்வில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை டிசம்பர் 15ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் […]

இந்தியா

இந்தியாவில் அதிர்ச்சி – மூன்று வீடுகளில் தீப்பரவக் காரணமாகிய காகம்

  • November 16, 2025
  • 0 Comments

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் காகத்தின் செயலால் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக ஒரு வீடும், அதனை அண்மித்த மூன்று குடிசைகளும் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகின. வீடொன்றில் மேல் மாடியில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினை காகம் ஒன்று தூக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், அது தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்த வீடும் அதைச் சுற்றியிருந்த மூன்று குடிசைகளும் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட […]

உலகம்

தென் கொரியாவில் காதலியை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் சடலத்தை வைத்த காதலன்

  • November 16, 2025
  • 0 Comments

தென் கொரியாவில் காதலியை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தன்னை அவமானப்படுத்தியமையால் கொலை செய்து பல மாதங்களாக குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்ததாக சந்தேக நபரான காதலன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதன் பின்னர், அவர் காதலியைப் போலவே நடித்து அவரின் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். 40 வயதான காதலன், கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி வடக்கு ஜியோல்லா மாகாணத்தின் குன்சானில் உள்ள […]

உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சிக்கு வரிகள் நீக்கம்

  • November 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி மீதான வரிகளை நீக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதிகளில் மாட்டிறைச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான மாட்டிறைச்சியை அமெரிக்காவிற்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்கிறது. இவ்வாறான நிலையில், மாட்டிறைச்சி மீதான வரிகளை இரத்து செய்வதன் மூலம் இறக்குமதியாளர்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய வரி விலக்கு பட்டியலில் மாட்டிறைச்சி மட்டுமல்லாமல், […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரோன் – ஆயுதங்களைத் குறி வைக்கும் மர்மம்

  • November 16, 2025
  • 0 Comments

பிரான்ஸில் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பரபரப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறந்த நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, துலூஸ் பகுதியிலுள்ள காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் பறந்துள்ளது. அந்த நேரத்தில் கவச வாகனங்களை ஏற்றிய ஒரு சரக்கு ரயில் அப்பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இதன்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் குழுவினர் முதலில் இந்தச் சந்தேகத்திற்கிடமான ட்ரோனை அடையாளம் […]

பொழுதுபோக்கு

ராஜமவுலி – மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’ படத்தின் டீசர் வெளியானது…

  • November 15, 2025
  • 0 Comments

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்தப் படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

இலங்கை

சுமந்திரனை சந்தித்த நாமல் – நுகேகொடை பேரணி குறித்து விளக்கம்!

  • November 15, 2025
  • 0 Comments

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து, நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணி குறித்து விளக்கினார். இது தொடர்பில் ‘X’ தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள 21 ஆம் திகதி பொது பேரணி மற்றும் மக்களுக்கு […]

இலங்கை

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது!

  • November 15, 2025
  • 0 Comments

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜுனைதீன் நஸ்லீம் (43வயது) எனவும் தெரியவந்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் 25ம் திகதி ஹெரோயின் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை சிறைச்சாலையில் 53 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் 2025 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் விடுதலை செய்யப்பட்டார். […]