கருத்து & பகுப்பாய்வு செய்தி

கம்பளி மாமத் (woolly mammoth) யானையை மீளுருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள்!

  • November 15, 2025
  • 0 Comments

கம்பளி மாமத் (woolly mammoth) யானையை மீளுருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் சாத்தியமான சமிக்ஞையை வெளியிட்டுள்ளனர். இதன்படி கம்பளி மாமத்தின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக ஆர்.என்.ஏவைப் பிரித்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் புரட்சியை ஏற்படுத்தும். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் (Stockholm University) மற்றும் டென்மார்க்கின் குளோப் இன்ஸ்டிடியூட் (Globe Institute) விஞ்ஞானிகள் இணைந்து இந்த கண்டுப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த முறையின் கீழ் கம்பளி மாமத், டோடோ மற்றும் டாஸ்மேனியன் புலி ஆகிய […]

உலகம்

ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் – சீன குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!

  • November 15, 2025
  • 0 Comments

ஜப்பானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சீனா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சியின் அறிக்கையை எதிர்த்து சீன அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனா தைவானைத் தாக்கினால், அதன் நாட்டின் தற்காப்புக்காக அதன் இராணுவம் மூலம் அதற்கு பதிலடி கொடுக்கும் என்று ஜப்பானிய பிரதமர் சமீபத்தில் கூறியிருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்துள்ளது, மேலும் பிரதமரின் அறிக்கையை எதிர்த்து சீனாவிற்கான ஜப்பானிய […]

பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் புதிய அப்டேட் வெளியானது

  • November 15, 2025
  • 0 Comments

விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் படத்திற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் சசியுடன் நூறு சாமி படத்திற்காக இணைகின்றார் விஜய் ஆண்டனி. இதை அறிவிக்கும் வகையில், கிராமத்தில் வயலில் அமர்ந்திருக்கும் வகையிலான ஒரு படத்தை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார். பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற “நூறு சாமிகள் இருந்தாலும்…” என்ற சூப்பர் ஹிட் பாடலில் இருந்தே “நூறு சாமி” என்ற பெயர் புதிய படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்து மீதான இறக்குமதி வரியை குறைத்த ட்ரம்ப்!

  • November 15, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்து மீது விதித்துள்ள 39 சதவீதமான இறக்குமதி வரியை 15  சதவீதமாக குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்காவில் 200 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக சுவிட்சர்லாந்து அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. “இது நமது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய நிவாரணம்” என்று சுவிஸ் பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் (Guy Parmelin) கூறியுள்ளார். சுவிஸ் வணிகத் தலைவர்கள் ட்ரம்ப்பை சந்திக்க எடுத்த முயற்சிகள்  இந்த ஒப்பந்தத்தை […]

இந்தியா

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – விஜய் வெளியிட்ட காணொளி!

  • November 15, 2025
  • 0 Comments

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பில் நேரலையில் பேசிய தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் SIR படிவம் எப்படி கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு குறித்த படிவம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படிவம் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் படிவத்தை பெற்றுக்கொண்டு நிரப்புமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://x.com/TVKVijayHQ/status/1989645823588860392?s=20 […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் புகலிடம் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

  • November 15, 2025
  • 0 Comments

பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) டென்மார்கை தழுவிய குடியேற்ற சீர்த்திருத்தங்களை வரும் திங்கட்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறிது. புதிய சீர்த்திருத்தங்களுக்கு அமைய இங்கிலாந்தில் புகலிடம் பெற்ற மக்கள், தங்கள் நாடு பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டால் மீளவும் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய இங்கிலாந்து விதிகளின் கீழ், அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். பின்னர் காலவரையற்ற விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் குடியுரிமை பெறும் பாதையில் செல்லலாம். இதனை […]

இலங்கை

புரியாத எழுத்துக்களில் மருந்து சீட்டுக்களை எழுத கூடாது – வைத்தியர்களுக்கு எச்சரிக்கை!

  • November 15, 2025
  • 0 Comments

மருந்துச் சீட்டுகளை எழுதுதல் மற்றும் பரிந்துரைத்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மருத்துவ நிபுணர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. நோயாளி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த வழிகாட்டுதல்கள் அவசியம் என்று கவுன்சில் எடுத்துரைத்துள்ளது. இது தொடர்பில் மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிப்பில், சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய தெளிவின்மை சரியான மருந்தை அடையாளம் காண்பதை கடினமாக்கியுள்ளது எனவும் இது […]

பொழுதுபோக்கு

இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்….

  • November 15, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்திலும் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சனிக்கிழமை எபிசோடில் கனி வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல், ‘ஞாற்றுக்கிழமை எபிசோடில் வாட்டர் மெலோன் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கனி வெளியேறியது பலருக்கும் ஷாக் கொடுத்த நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டது நினைத்த ஒன்று தான் தாமதமான நடப்பதாக அறியமுடிகின்றது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றவர் திவாகர் தற்போது வெளியேற்றப்பட்டதை சிலர் […]

இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியிலும் இப்படி நடக்கிறதே: தமிழ் எம்.பி. குமுறல்!

  • November 15, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதாள குழுவுக்குவுக்கு எதிரான செயற்பாடு, போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்பவற்றை நாம் ஆதரிக்கின்றோம். இவற்றில் குற்றம் காண விரும்பவில்லை. ஜே.ஆர். […]

உலகம் செய்தி

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு – விமான சேவைகளை நிறுத்திய தென்கொரியா!

  • November 15, 2025
  • 0 Comments

தென் கொரியாவில் பல்கலைக்கழக நுழைவு தேர்வை முன்னிட்டு நாட்டின் விமான நிலைய செயற்பாடுகள்  நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் அரை மில்லியன் தேர்வாளர்கள் இதில் பங்கேற்ற நிலையில்,  காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத் தேர்வின் கேட்கும் புரிதல் பிரிவுக்கு (listening comprehension section) மாணவர்கள் அமர்ந்திருக்கும்போது எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, விமானங்கள் தரையிறங்கவோ, அல்லது புறப்படும் செயற்பாட்டை மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 65 சர்வதேச வருகை மற்றும் புறப்பாடுகள் உட்பட 140 […]