இலங்கை

மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் 8 பேர் சடலங்களாக மீட்பு

  • December 2, 2025
  • 0 Comments

நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், அத்தோட்டத்தைச் சேர்ந்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தச் சம்பவத்தில் லயன் குடியிருப்பைச் சேர்ந்த 13 வீடுகள் முழுமையாக மண்ணில் புதையுண்டுள்ளன. கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரை 8 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினமும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மேலும் இரு பாலியல் குற்றவாளிகள் தவறுதலாக விடுதலை!

  • December 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் இரு வன்முறை அல்லது பாலியல் குற்றவாளிகள் தவறுதலாக   விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி (David Lammy) தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரை 91 கைதிகள் இவ்வாறு தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக நீதி அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக வாரத்திற்கு மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மூன்று வாரங்களில் 12 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் கடல் சீற்றம்

  • December 2, 2025
  • 0 Comments

முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்து செல்வதுடன் கடலலை அதிகமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்போது கடலலையின் சீற்றம் அண்ணளவாக 10 அடிக்குமேல் உயர்ந்து கடல் எது கரை என தெரியாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முன்னைய நாட்களை விட காற்றின் அளவும் மழையும் குறைவடைந்ததனால் முல்லைத்தீவு கடற்கரையின் சீற்றம் சற்று குறைவடைந்து செல்வதுடன் கடலலை கூடுதலாக இருக்கின்றது. எனினும் தேவையற்ற […]

இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் தவறுகளை சுட்டிக்காட்டிய ரணில்!

  • December 2, 2025
  • 0 Comments

சமீபத்திய வெள்ளத்தைத் தடுக்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை நடவடிக்கை எடுக்கத் தவறியது மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பை மீறுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பேரனர்த்தம் தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் நவம்பர் 28 அன்று அல்லாமல் நவம்பர் 27, 2025 அன்று செயல்படுத்தப்படவில்லை. நடவடிக்கைகளுக்கு மிக […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!

  • December 2, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (02) காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் பாதிப்பு!!

  • December 2, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் இன்று (02) வரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்தார். கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் இன்று (02) காலை 7:00 மணி வரைக்கும் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 212 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலும் 6615 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 521 குடும்பம் தம்பலகாமம் […]

இலங்கை செய்தி

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – எதிர்கட்சி குற்றச்சாட்டு!

  • December 2, 2025
  • 0 Comments

சமீபத்திய வெள்ளப் பேரழிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை, ஏனெனில் சில இறப்புகள் கணக்கிடப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம்,   அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை துல்லியமான எண்ணிக்கையாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். துல்ஹிரியாவில் சுமார் 21 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குருநாகல் போன்ற பகுதிகளிலிருந்தும் இதே போன்ற தகவல்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, கொடுக்கப்பட்ட […]

ஐரோப்பா

பண்டிகைக் காலம் – பரபரப்பாகும் இங்கிலாந்து விமான நிலையங்கள்!

  • December 2, 2025
  • 0 Comments

இங்கிலாந்து விமான நிலையங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான கிறிஸ்துமஸ் காலத்திற்கு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 22 மில்லியன் பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீத்ரோ விமான நிலையம் மட்டும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இது ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டில் 90.2 மில்லியன் பயணிகள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

பேரிடர் நிலை : 410 மரணங்கள் பதிவு, இலட்சக்கணக்கானோர் பரிதவிப்பு!

  • December 2, 2025
  • 0 Comments

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட  மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 336 பேர் காணாமல் போயுள்ளதுடன்,  407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல்  பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், […]

இலங்கை

மின்சாரம் மற்றம் எரிவாயு கசிவு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

  • December 2, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழல் குறித்த சிறப்பு அறிவுறுத்தல்களை காவல்துறை வழங்கியுள்ளது. இதற்கமைய வெள்ளத்திற்கு பிறகு தங்களது வீடுகளுக்கு திரும்பும் மக்கள் மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் வலியுறுத்தல்,  01. மின் மூலங்களை அணுகுவதற்கு முன் அதிகாரப்பூர்வ மின் தொழில்நுட்ப வல்லுநரின் பரிசோதனையைப் பெறுங்கள்.  02. ஈரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.  03. எரிவாயு கசிவு ஏற்பட்டால், மின்சாரம் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் எந்த உபகரணங்களையும் […]