ஐரோப்பா முக்கிய செய்திகள்

உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!

  • December 2, 2025
  • 0 Comments

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) மற்றும் வோவ்சான்ஸ்க் ( Vovchansk) ஆகிய நகரங்களை  கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய படைகள் நேற்று அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆதாரங்களை முன்வைக்காமல் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போரில் ரஷ்யா முன்னேறி வருகிறது, சமரசம் செய்யத் தேவையில்லை என்ற செய்தியை அனுப்பும் வகையில் […]

இலங்கை

மற்றொரு சூறாவளி உருவாகிறதா? வானிலை ஆய்வுத் துறை விளக்கம்!

  • December 2, 2025
  • 0 Comments

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்பதால், இந்த மாதம் இலங்கையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை அதிகாரியான  மெரில் மெண்டிஸ்  நேற்று தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு குறைந்த அழுத்த அமைப்பு அல்லது சூறாவளி புயல் உருவாகும் என்ற செய்திகளையும் […]

ஐரோப்பா

UKவில் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த அழைப்பு!

  • December 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 800,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. சமூக நீதி மையத்தின் (CSJ) புதிய பகுப்பாய்வில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட 10 பெற்றோரில் நான்கு பேர் தங்கள் குழந்தை சமூக வலைத்தளத்தில் குறைந்தது ஒரு தளத்தையாவது பயன்படுவத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ் (Lord Nash)  இந்த எண்ணிக்கையை “ஆழ்ந்த கவலைக்குரியது” என்று விவரித்துள்ளார். அத்துடன் சமூக ஊடக […]

உலகம்

குளிர் பருவம் ஆரம்பம் – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

  • December 2, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் சில பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், டிசம்பர் முழுவதும் “அதிக” குளிரான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தின் (டிசம்பர்) மூன்றாவது வாரத்தில் கனேடிய சமவெளிகளிலிருந்து அமெரிக்க கிழக்கு கடற்கரை வரை அதிக குளிர் நிறைந்த வானிலையை மக்கள் உணர்வார்கள் என காலநிலை ஆய்வாளர் ஜூடா கோஹன் (Judah Cohen) கணித்துள்ளார். அதேபோல் இந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மத்திய  மற்றும்  அட்லாண்டிக் பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கு கீழான வெப்பநிலையே பதிவாகும் […]

இலங்கை செய்தி

நிவாரணக் குழுக்களால் ஏற்படும் இடையூறு -காவல்துறையின் விசேட கோரிக்கை!

  • December 2, 2025
  • 0 Comments

பேரிடர் பாதித்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, சாலை மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் வுட்லர் (ASP) F. U. (Wootler)  இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இருப்பினும், தற்போது சாலை பழுதுபார்ப்பு நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள்

  • December 1, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வெளியே பாயத் தொடங்கியுள்ளது, இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாகமுல்லைத்தீவு மாவட்டம் – பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் பாதிப்பு (குடும்பங்கள் மற்றும் நபர்கள்) பிரதேச செயலாளர் பிரிவு (DS Division) பாதிக்கப்பட்ட குடும்பங்கள் (Families) பாதிக்கப்பட்ட நபர்கள் (Persons) […]

இலங்கை செய்தி

வீதி தடைப்பட்டதால் மணலாறுக்கு படக்குச் சேவை ஆரம்பம்

  • December 1, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது. வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இதன் போது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மக்களை வெள்ள அனர்த்தத்தின் போது மீனவர்கள் படகுகள் மூலம் மீட்டனர். தற்போது இன்றைய தினம்(01.12.2025) குறித்த பகுதி மக்களின் தேவைகருதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒருங்கமைப்பில் இலங்கை கடற்படையின் உதவியுடன் […]

ஐரோப்பா செய்தி

மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த பிரித்தானிய மருத்துவர்கள்

  • December 1, 2025
  • 0 Comments

நீண்ட காலமாக நிலவி வரும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக, பிரித்தானிய மருத்துவ சங்கம் (British Medical Association – BMA) இங்கிலாந்தில் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவர்கள் (junior doctors) என அறியப்படும் உறைவிட மருத்துவர்கள் (Resident doctors), டிசம்பர் 17 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டமானது மார்ச் 2023 முதல் மருத்துவர்களின் சங்கத்தால் அறிவிக்கப்படும் 14வது வேலைநிறுத்தம் இதுவாகும். இந்த வேலைநிறுத்தம் குறிப்பாக […]

இலங்கை செய்தி

பொருட்களின் விலையை ஏற்றினால் கடும் நடவடிக்கை: வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

  • December 1, 2025
  • 0 Comments

தற்போதைய பேரிடர் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துதல், பொருட்களைப் பதுக்குதல் அல்லது மறைத்தல் போன்ற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் (unfair or malicious trading practices) ஈடுபடும் வணிகம் அல்லது தனிநபர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் இன்று (டிசம்பர் 1, 2025) அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி (B.K. Prabath Chandrakeerthi) அவர்கள் கூறுகையில், தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பொதுமக்கள் […]

உலகம் செய்தி

சிங்கப்பூரில் இரண்டு நாட்களில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • December 1, 2025
  • 0 Comments

கடந்த வாரம் சிங்கப்பூரில்(Singapore) போதைப்பொருள் குற்றங்களுக்காக மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மொத்த மரணதண்டனை எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் 15 கிராமுக்கு மேல் டயமார்ஃபின்(diamorphine), 30 கிராம் கோக்கைன்(cocaine), 250 கிராம் மெத்தம்பேட்டமைன்(methamphetamine) மற்றும் 500 கிராம் கஞ்சா(cannabis) ஆகியவற்றை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது வைத்திருத்தல் உள்ளிட்ட கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், மரண தண்டனையை நீக்குவது மிகவும் மோசமான விளைவுகளுக்கு […]