இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாய்

  • December 3, 2025
  • 0 Comments

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

உலகம்

வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!

  • December 3, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான  அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட இலகுவானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது சாத்தியமான போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை  பென்டகன் எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் போர் குற்றங்கள் குறித்த சாத்தியமான […]

இலங்கை

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்தது

  • December 3, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் […]

இலங்கை

பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை!

  • December 3, 2025
  • 0 Comments

ஹெலிகாப்டர் செயல்பாடுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்களை இயக்குவதை தவக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார். சமீபத்திய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய அவசரகால முயற்சிகளை ஆதரிப்பதற்கும் நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும் இந்த நேரத்தில் அனைத்து ட்ரோன் இயக்குபவர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வட்டி விதிக்க முன்மொழிவு!

  • December 3, 2025
  • 0 Comments

துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் சுமார் 900 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை   விடுத்துள்ளார். குறித்த வாகனங்களின் விலைப்பட்டியல் மதிப்பில் வட்டி விதிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

இலங்கை

அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டிய ஜனாதிபதி!

  • December 3, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய பேரிடர் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிதியுதவி

  • December 3, 2025
  • 0 Comments

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க Apple நிறுவனம் முன்வந்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக அங்குள்ள மக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிவாரண மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

சாம்சங்கின் முதல் பல-மடிப்பு கையடக்க தொலைபேசி அறிமுகம்

  • December 2, 2025
  • 0 Comments

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) நிறுவனம், தனது முதல் பல-மடிப்பு (multi-folding) ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியைஇன்று(டிசம்பர் 2) அறிமுகப்படுத்தியது. பலவாறு போட்டி தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் தொலைபேசிச் சந்தைத்துறையில் தனது நிலையை வலுப்படுத்த சாம்சங் இந்த முயற்சியை எடுத்துள்ளது. சாம்சங்கின்புதிய கலக்ஸி Z ட்ரைஃபோல்ட் (Galaxy Z TriFold) அறிமுகம், சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் மடிக்கக்கூடிய தொலைபேசி சந்தையில் சாம்சங் தன்னை வலுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த வகை மூன்று தட்டுகளை பயன்படுத்தி, […]

செய்தி விளையாட்டு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

  • December 2, 2025
  • 0 Comments

பாகிஸ்தான்(Pakistan) தேசிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், தொடரின் அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி(Rangiri) தம்புள்ளை(Dambulla) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஜனவரி 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு(England) எதிராக ஒருநாள் மற்றும் […]

உலகம் செய்தி

ஹோண்டுராஸின்(Honduras) முன்னாள் ஜனாதிபதி விடுதலை

  • December 2, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) மன்னிப்பு வழங்கியதை அடுத்து, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஹோண்டுரான்(Honduras) ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்(Juan Orlando Hernandez) விடுவிக்கப்பட்டுள்ளார். ஹெர்னாண்டஸின் வழக்கறிஞர் ரெனாட்டோ ஸ்டேபில்(Renato Stabile) முன்னாள் ஹோண்டுரான் ஜனாதிபதியின் விடுதலையை உறுதிப்படுத்தியுள்ளார். “ஜனாதிபதி டிரம்ப் டிசம்பர் 1, 2025 அன்று கையொப்பமிட்ட முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி ஹெர்னாண்டஸ் இன்று அதிகாலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்,” என்று ரெனாட்டோ […]

error: Content is protected !!