இலங்கை செய்தி

மனிதாபிமான நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தது சுவிஸ் விமானம்!

  • December 6, 2025
  • 0 Comments

டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid-SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) […]

இந்தியா செய்தி

டெல்லியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது நபர் கைது

  • December 6, 2025
  • 0 Comments

வடக்கு டெல்லியின்(Delhi) பவானாவில்(Bawana) நான்கு வயது சிறுமியை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 வயது இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பவானாவில் வசிக்கும் ரிஸ்வான்(Rizwan) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி மது போதையில் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து வந்த புகாரை தொடர்ந்து மீட்பு குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமி அழுது கொண்டிருந்ததையும், அவளது அந்தரங்கப் பகுதிகளில் இருந்து இரத்தம் வெளியேறியதையும் கண்டனர். அவர் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக […]

இலங்கை செய்தி

விளம்பரம் வேண்டாம்: செயலில் காட்டுங்கள்: அரசிடம் சஜித் வலியுறுத்து!

  • December 6, 2025
  • 0 Comments

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக விளம்பரம் செய்வதுடன் நின்றுவிடாது, அந்த உதவிகள் விரைவில் மக்களை சென்றடைய வழிவகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட சென்றவேளையிலேயே சஜித் இன்று இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். “ நாட்டில் ஆபத்தான வானிலை நிலைமை உருவாகி வருவதாக கடந்த 11 ஆம் திகதி முதல் அறிவிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளன. அதனை மறுக்க முடியாது. காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு தமிழகமும் நேசக்கரம்!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இதற்கமைய 950 டொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன்கூடிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த கப்பல் இன்று காலை வழியனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதின் ஆலோசனையின் படி, சென்னைதூதுவராக உள்ள டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்திய மத்திய அரசாங்கமும் அந்நாடு […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பேரிடரை ஒப்பிடும் கம்மன்பில!

  • December 6, 2025
  • 0 Comments

பேரிடர் தொடர்பில் அலட்சிய போக்குடன் செயல்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தற்போது தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும், தந்திரோபாயமான முறையிலேயே வழக்கு தொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கம்மன்பில மேலும் கூறியவை வருமாறு, “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே பாரிய அழிவு ஏற்பட்டது. நாட்டில் அண்மையில் […]

உலகம் செய்தி

நியூயார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 வயது இந்திய மாணவி மரணம்

  • December 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படித்து வந்த 24 வயது சஹஜா ரெட்டி உடுமலா(Sahaja Reddy Udumala) என்ற இந்திய மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக நியூயார்க்கில்(New York) உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அல்பானியில்(Albany) வீடு தீ விபத்தில் உயிரிழந்த உடுமலா அவர்களின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் Xல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், உடுமலா அவர்களின் குடும்பத்தினருடன் […]

இலங்கை செய்தி

4 கோடி ரூபா பெறுமதியான காணியை இலவசமாக வழங்கிய நபர்!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் மாத்திரமன்றி பொது மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதி மற்றும் பொருள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கியுள்ளன. இந்த நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்காக நபர் ஒருவர் தனக்கு சொந்தமான 24 பேர்ச் காணியை இலவசமாக வழங்க முன் வந்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் […]

இலங்கை கருத்து & பகுப்பாய்வு செய்தி

நுவரெலியா கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு

  • December 6, 2025
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வருந்துகின்றனர். மேலும், அறுவடை காலங்களில் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு தொழில்களும் தற்போது வரை நலிவடைந்து வருகிறது. நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கை நிலங்களில் வெள்ள நீர் உட்பிரவேசித்தது. அதன் விளைவாக மலைநாட்டு மரக்கறி […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் ஏழு பிட் புல் நாய்களால் தாக்கப்பட்டு ஆண் மற்றும் 3 மாத குழந்தை மரணம்

  • December 6, 2025
  • 0 Comments

டென்னசியில்(Tennessee) ஒரு ஆண் மற்றும் அவரது 3 மாத பேத்தி ஏழு பிட் புல்(pit bulls) நாய்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தி நியூயார்க் போஸ்ட்(The New York Post) செய்தி வெளியிட்டுள்ளது. 50 வயதான ஜேம்ஸ் அலெக்சாண்டர் ஸ்மித்(James Alexander Smith) மற்றும் குழந்தை துல்லாஹோமாவில்(Tullahoma) உள்ள அவர்களின் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்த போது குழந்தை தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் பாதிக்கப்பட்டவர்களை அடைய ஏழு பிட் புல் நாய்களையும் சுட வேண்டிய […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் குழந்தை உட்பட 38 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்

  • December 6, 2025
  • 0 Comments

முன்னாள் பிரித்தானிய(Britain) மருத்துவர் ஒருவர், 13 வயதுக்குட்பட்ட குழந்தை உட்பட அவரது பராமரிப்பில் இருந்த 38 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 38 வயதான நதானியேல் ஸ்பென்சர்(Nathaniel Spencer), மத்திய பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றியபோது நோயாளிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக பிராந்திய வழக்கறிஞர் பென் சாம்பிள்ஸ்(Ben Samples) தெரிவித்துள்ளார். ஸ்பென்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2017 மற்றும் 2021க்கு இடையில் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட்(Stoke-on-Trent) மற்றும் டட்லியில்(Dudley) உள்ள இரண்டு பிராந்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் நடந்ததாகக் […]

error: Content is protected !!