இலங்கை

50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வெள்ளத்தால் அழிந்தன

  • December 10, 2025
  • 0 Comments

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளின் இருப்பு அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலை ஐந்து அடி நீரில் மூழ்கியது. இதன் விளைவாக, ஸ்கேனர், சிறுநீரகப் பிரிவில் உள்ள இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள், இரண்டு அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் பிற வார்டுகள் உள்ளிட்ட உபகரணங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதனால் மில்லியன் கணக்கில் சேதம் […]

ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் வாரத்திற்கு 04 நாள் பாடசாலைகளை நடத்த பரிசீலனை!

  • December 10, 2025
  • 0 Comments

ஸ்கொட்லாந்து அரசாங்கம் வாரத்தில் நான்கு நாட்கள் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நல்வாழ்வு குறித்து வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த சோதனை முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கற்பித்தல் மிகவும் மன அழுத்தமான தொழில்களில் ஒன்றாக உள்ளது, ஊழியர்கள் தொழிலை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணங்களாக மன அழுத்தம் மற்றும் சோர்வை குறிப்பிடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு   நான்கு நாட்கள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கமைய வாரத்திற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

உறுதிமொழிகளை மறந்து செயல்பட அரசுக்கு இடமளியோம்!

  • December 10, 2025
  • 0 Comments

  பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. வலியுறுத்தினார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ பேரிடர் இழப்பு தொடர்பில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறியவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறு கோரியுள்ளோம். அதன்மூலம் உண்மை தெரியவரும். அதேபோல பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் […]

உலகம்

US : மியாமியில் முதல் முறையாக மேயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம்!

  • December 10, 2025
  • 0 Comments

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரத்தில் இடம்பெற்ற மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தலில்  முதல் முறையாக  பெண் ஒருவர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார். மியாமி மேயர் போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எய்லீன் ஹிக்கின்ஸ் (Eileen Higgins) என்ற பெண் வேட்பாளர்,   குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட  எமிலியோ கோன்சலஸை (Emilio Gonzalez) தோற்கடித்து வெற்றியீட்டியுள்ளார். இது  2026 இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு முக்கியமான ஊக்கத்தை அளிக்கிறது. குடியேற்றம், மனிதாபிமானமற்ற […]

இலங்கை

கிரேக்க பத்திர பரிவர்த்தனை வழக்கு – அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை!

  • December 10, 2025
  • 0 Comments

கிரேக்க பத்திர பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டில், கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் […]

இலங்கை

மக்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம்!

  • December 10, 2025
  • 0 Comments

சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் கவலை தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பாலும் தூக்கக் கலக்கம், நீடித்த மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட உணர்ச்சி அதிர்ச்சியின் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக   மனநல மருத்துவர் டாக்டர் விந்தியா விஜயபண்டார குறிப்பிட்டார். பேரிடரின் போது ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக பதட்டம், மனச்சோர்வு மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்குலைவு (PTSD) போன்ற நிலைமைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது […]

இலங்கை

டித்வா சூறாவளி – கடற்கரையில் தேங்கிய குப்பைகள்!

  • December 10, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இலங்கையின் கடற்கரையின் 143 கிலோமீட்டர்கள் மாசுபட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பரவலான வெள்ளம் கடற்கரையில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என  MEPA தலைவர் சமந்த குணசேகர கூறினார். கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் ஆகிய கடலோரப் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும். நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் போது […]

கருத்து & பகுப்பாய்வு

வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2025 பதிவு!

  • December 10, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு (2025) உலகின் இரண்டாவது அல்லது மூன்றாவது வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் (Copernicus) காலநிலை மாற்ற சேவை (C3S) தெரிவித்துள்ளது. C3Sஇன் தரவுப்படி, சராசரி உலக வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கங்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கணிசமான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  தவறியுள்ள நிலையில், சமீபத்திய ஆய்வு வந்துள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் கொடிய […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சர்வதேச உதவி: எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

  • December 10, 2025
  • 0 Comments

  டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இறங்கியுள்ளார். இதற்கமைய கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் அவர் தொடர் சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார். இதன் மற்றுமொரு அங்கமாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர், அந்தலிப் எலியாஸை (10) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் சந்தித்தார். இலங்கை எதிர்கொண்ட சகல இக்கட்டான தருணங்களிலும் பங்களாதேஷ் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டமைக்கு ஒட்டுமொத்த இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சித் […]

உலகம்

பகையாளிகளின் வான் மண்டலத்திற்கு அருகில் போர் பயிற்சியில் ஈடுபட்ட சீனா, ரஷ்யா!

  • December 10, 2025
  • 0 Comments

சீனாவும், ரஷ்யாவும் ஜப்பான் மற்றும் தென் கொரியா அருகே கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் Tu-95  அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின்  H-6 குண்டுவீச்சு விமானங்கள்,  இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இது  தேசிய பாதுகாப்பு குறித்த கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. ஏழு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் அதன் வான்வெளியை மீறவில்லை எனக் […]

error: Content is protected !!