மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தை
மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 16 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது. தானே-கோட்பந்தர் சாலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டது. கடுமையான இடுப்பு காயங்களுடன் காணப்பட்ட அந்தக் குழந்தை, நைகானில் உள்ள சின்சோட்டியில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக மும்பையில் […]













