செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோ நகரத்திற்கு அருகில் 2 கொலம்பிய இசைக்கலைஞர்களின் சடலங்கள் மீட்பு

  • September 23, 2025
  • 0 Comments

கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு கொலம்பிய இசைக்கலைஞர்களின் உடல்கள் மெக்சிகோ நகரத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பி-கிங் என்று அழைக்கப்படும் 31 வயதான பேய்ரான் சான்செஸ் மற்றும் ரெஜியோ க்ளோன் என்று அழைக்கப்படும் 35 வயதான டிஜே ஜார்ஜ் ஹெர்ரெரா ஆகியோரின் மரணம் குறித்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ நகர வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ மாநிலத்தில் உள்ள கோகோடிட்லான் நகரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்களின் அடையாளங்களுடன் கொலம்பியர்களின் அடையாளம் பொருந்தியதாக […]

ஆசியா செய்தி

சிகிச்சைக்காக இந்தியாவுக்குக் அழைத்து செல்லப்பட்ட நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி

  • September 23, 2025
  • 0 Comments

செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த நேபாள போராட்டங்களின் போது பலத்த தீக்காயங்களுக்கு ஆளான முன்னாள் பிரதமர் ஜலநாத் கானாலின் மனைவி மேல் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வன்முறை போராட்டங்களின் போது காத்மாண்டுவின் டல்லு பகுதியில் உள்ள கானாலின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் ரவி லட்சுமி சித்ரகார் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தின் போது 15 சதவீத தீக்காயங்களுக்கு ஆளான சித்ரகார் கீர்த்திபூரில் உள்ள பர்ன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது இடது […]

ஆப்பிரிக்கா செய்தி

ஹைட்டியின் தலைநகரில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 11 பேர் மரணம்

  • September 23, 2025
  • 0 Comments

ஹைட்டியின் தலைநகரில் ஒரு கும்பல் தலைவரை இலக்காகக் கொண்ட ட்ரோன் தாக்குதலில் எட்டு குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. ட்ஜோமா என்றும் அழைக்கப்படும் கும்பல் தலைவரான ஆல்பர்ட் ஸ்டீவன்சன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி குழந்தைகளுக்கு பரிசுகளை விநியோகித்துக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் கும்பல் தலைவரான ஸ்டீவன்சன் காயமின்றி உயிர் தப்பித்தாக உரிமை குழு தெரிவித்துள்ளது. முதல் ட்ரோன் தாக்குதலில் 2 முதல் 10 வயது […]

செய்தி விளையாட்டு

Asia Cup – இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை அணி

  • September 23, 2025
  • 0 Comments

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடந்து 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து […]

இந்தியா செய்தி

14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அனுமதி

  • September 23, 2025
  • 0 Comments

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமியின் உடல்நல அபாயங்களையும் மருத்துவக் குழுவின் பரிந்துரையையும் கருத்தில் கொண்டு அவரது கர்ப்பத்தை கலைக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 28 வார கர்ப்பிணியாக இருந்த சிறுமி ஆரம்பத்தில் பெற்றோரிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டார், ஆனால் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் இந்த நடைமுறைக்கு ஒப்புக்கொண்டனர். கர்ப்பத்தைத் தொடர்வது சிறுமியின் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்ற […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் மரணம்

  • September 23, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பல மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மூன்று மாதக் குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். பல மணிநேர தீவிர மீட்புப் பணிகளுக்குப் பிறகு உயிரிழந்தவர்கள் அல்ஃபியா மற்றும் ஃபஹீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, நான்கு குடும்பங்கள் கட்டிடத்தில் வசித்து வந்தன. சம்பவம் நடந்த நேரத்தில், 14 பேர் உள்ளே இருந்தனர், மற்றவர்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். 10-15 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கட்டிடத்தில், […]

செய்தி வட அமெரிக்கா

விமான விபத்தில் உயிரிழந்த பிரபல மெக்சிகன் தொலைக்காட்சி தொகுப்பாளினி

  • September 23, 2025
  • 0 Comments

மெக்சிகோவின் நியூவோ லியோனில் பறக்கும் பயிற்சியின் போது விபத்தில் சிக்கி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெலிடாரியோ மாட்டுடினோ தொலைக்காட்சியின் தொகுப்பாளரான 43 வயது டெபோரா எஸ்ட்ரெல்லா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் பிரையன் லியோனார்டோ பாலேஸ்டெரோஸ் அர்குவேட்டா விபத்தில் உயிரிழந்துள்ளனர் பெஸ்குவேரியா நதிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிவில் ஏரோநாட்டிக்ஸ் பொது இயக்குநரகம் மற்றும் மாநில வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

இந்தியா செய்தி

டெல்லியில் உணவு விஷத்தால் சுமார் 200 பேர் மருத்துவமனையில் அனுமதி

  • September 23, 2025
  • 0 Comments

வடமேற்கு டெல்லியில் நவராத்திரி விரதத்தின் போது பக்வீட் மாவு கொண்டு தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்ட கிட்டத்தட்ட 200 பேர் நோய்வாய்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜஹாங்கிர்புரி, மகேந்திர பார்க், சமய்பூர், பால்ஸ்வா டெய்ரி, லால் பாக் மற்றும் ஸ்வரூப் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்திற்கு ‘குட்டு அட்டா’ (பக்வீட் மாவு) கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு பலர் நோய்வாய்ப்பட்டதாகத் தகவல் […]

செய்தி வட அமெரிக்கா

டொனால்ட் டிரம்பின் ஹெலிகாப்டர் மீது லேசர் ஒளியை பயன்படுத்திய நபர் கைது

  • September 23, 2025
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புறப்பட்ட ஹெலிகாப்டர் மீது லேசர் ஒளியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டனை சேர்ந்த 33 வயதான ஜேக்கப் சாமுவேல் விங்க்லர், வெள்ளை மாளிகையின் வெளிப்புற நடைபாதையில் நின்று ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் மீது சிவப்பு லேசர் ஒளியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விங்க்லரின் நடவடிக்கை “திடீரென குருட்டுத்தன்மை மற்றும் திசைதிருப்பல் அபாயத்தை ஏற்படுத்தியது” என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விங்க்லரின் இந்த செயலுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை […]

இந்தியா செய்தி

சொகுசு வாகன வரி ஏய்ப்பு தொடர்பாக பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் வீடுகளில் சோதனை

  • September 23, 2025
  • 0 Comments

சொகுசு கார் வரி ஏய்ப்புக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க அதிகாரிகள் ‘நும்கோர்’ என்ற குறியீட்டுப் பெயரில் நாடு தழுவிய சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 30 இடங்களில் உயர்மட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன் அடிப்படையில் பிரபல நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் ஏதும் இல்லை என அதிகாரிகள் […]

error: Content is protected !!