அமெரிக்காவில் குடியேறிகள் வெளியேற்றம் – டிரம்ப்பின் நடவடிக்கைகள் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு
அமெரிக்காவிலிருந்து குடியேறிகளை வெளியேற்றும் முயற்சிகளில் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை என்று அமெரிக்க மக்களின் பெரும்பான்மை கருத்து தெரிவிக்கின்றனர். CNN தொலைக்காட்சி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, இந்த நிலைப்பாட்டில் இருப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த ஆய்வில், 55 சதவீத மக்கள் டிரம்ப்பின் போக்கு மிகவும் கடுமையானது எனக் கூறியுள்ளனர். இது பிப்ரவரி மாதத்தில் நடந்த அதேவகையான ஆய்வில் பதிவு செய்யப்பட்ட 45% எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, 10% உயர்வைக் காட்டுகிறது. […]













