உலகம்

பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகள் விசா இல்லாமல் சீனாவுக்குப் பயணிக்க வாய்ப்பு

  • May 19, 2025
  • 0 Comments

பிரேசில், ஜப்பான், பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, லக்சம்பர்க், எஸ்டோனியா மற்றும் பல நாடுகள் ஒரு மாத காலத்திற்கு விசா இல்லாமல் சீனாவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. 2025 ஆம் ஆண்டில் சீனா தனது விசா இல்லாத பயணக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தி, அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த விரிவான புதுப்பித்தல், சர்வதேச சுற்றுலாவை புத்துயிர் பெறச் செய்வதற்கும், வணிகப் பரிமாற்றங்களை அதிகரிப்பதற்கும், உலகளாவிய கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு முயற்சியாகும். ஜூன் 1, 2025 முதல் மே […]

வட அமெரிக்கா

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறுத்து கவலை வெளியிட்ட வெள்ளை மாளிகை

  • May 19, 2025
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உடல்நிலை குறித்து சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அவர் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போட்டியாளரான பைடன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சிறுநீர் நோய் அறிகுறிகள் அதிகரித்ததை அடுத்து, அவரது புரோஸ்டேட் சுரப்பியில் ஒரு புதிய கட்டி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது, அதைத் தொடர்ந்து அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது […]

வாழ்வியல்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? வெளியான அதிர்ச்சி தகவல்

  • May 19, 2025
  • 0 Comments

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் ஜர்னல் சார்பாக 90,000 பேரிடம் ஆய்வொன்று செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் ஈடுபட்ட அனைவருக்கும் accelerometer (ஒரு கட்டமைப்பின் அதிர்வு அல்லது இயக்கத்தின் முடுக்கத்தை அளவிடும் ஒரு சாதனம்) என்ற கருவி தரப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் அனைவரும் ‘நடக்கும் நேரம் எவ்வளவு’ மற்றும் ‘ஒரே இடத்தில் உட்கார்ந்த நேரம் எவ்வளவு’ என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளைக் கொண்டு, அவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, இதயம் செயலிழப்பு ஆகியவை வருவது குறித்து சோதனை செய்யப்பட்டது. அதில், […]

இலங்கை

இலங்கை சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • May 19, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்து நாட்டவர் ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான சந்தேக நபர் பேங்காக்கிலிருந்து கோலாலம்பூர் வழியாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH0179 இல் வந்தார், மேலும் சுங்க அதிகாரிகள் அவரது சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.91 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் 79 மில்லியன் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக சுங்க […]

அறிவியல் & தொழில்நுட்பம்

14 நாட்கள் தாக்குப் பிடிக்கும் பேட்டரியுடன் Amazfit Bip 6 Smartwatch

  • May 19, 2025
  • 0 Comments

இன்-பில்ட் ஜி.பி.எஸ். கனெக்டிவிட்டி, 1.97-இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 5 ATM ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், 340 mAh பேட்டரி, பயோ டிராக்கர் மூலம் ஹெல்த் பீச்சர்கள் என அசத்தலான அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் பிப் 6 (Amazfit Bip 6) ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தைகளில் வெள்ளிக்கிழமை (மே16) அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த பெரும்பாலான கேட்ஜெட்ஸ் பிரியர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் மீது ஆர்வம் உள்ளது. […]

பொழுதுபோக்கு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு விஜய் வீரவணக்கம்

  • May 19, 2025
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று, முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.” என குறிப்பிட்டுள்ளார். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஆசியாவின் பல பகுதிகளில் கோவிட் பரவல் குறித்து சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • May 19, 2025
  • 0 Comments

ஆசியாவின் பல பகுதிகளில் கோவிட்-19 தொற்றுநோய் மீண்டும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹொங்காங், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் சுகாதார அதிகாரிகள் இது குறித்து ஆபத்தான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதிகமான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதால், சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தத் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. தொற்றுநோய் மீண்டும் பரவினால் ஆசிய நாடுகள் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்றும், மக்கள் மீண்டும் தனிப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பில் […]

செய்தி

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க 11 நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம்

  • May 19, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது: நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் அதாவது ரூ.8,560 கோடி நிதியுதவி அளிக்க ஐஎம்எப் ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு […]

விளையாட்டு

ஐபிஎல் 2026 -PLAYOFF சுற்றுக்கு 3 அணிகள் முன்னேற்றம்!

  • May 19, 2025
  • 0 Comments

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 60 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் […]

இலங்கை

இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • May 19, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும் , நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]

error: Content is protected !!