செய்தி

இலங்கையில் பாடசாலை உபகரணங்களின் விலை பாரிய அளவில் அதிரிப்பு

  • December 23, 2024
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை உபகரணங்களின் விலை பாரிய அளவில் அதிரித்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர். சில பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை […]

இலங்கை செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

  • December 23, 2024
  • 0 Comments

இலங்கையில் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில […]

செய்தி விளையாட்டு

அஸ்வினுக்கு நேர்ந்த சங்கடம்.. ஓய்வுக்கான காரணம் வெளியானது?

  • December 23, 2024
  • 0 Comments

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தாலும், ஓய்வுக்குப் பின்னான சர்ச்சைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா தொடரின் இடையிலேயே, அஸ்வின் ஓய்வை அறிவித்ததுதான் இப்போது கிரிக்கெட் உலகின் டாக். ஆனால், அப்போது ரோஹித் சர்மா பேசியதற்கும், அஸ்வின் சென்னை திரும்பிய பிறகு ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியும் முரண்படுவதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அஸ்வினுக்கு 2022க்குப் பிறகு டி20 போட்டியிலும், 2023 உலகக் கோப்பைக்குப் பின்னர் ஒரு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு – பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

  • December 23, 2024
  • 0 Comments

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வயல்கள் மற்றும் நீர்த் தேங்கி நிற்கும் இடங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் எலிகள் அதிகளவில் நடமாடும் இடங்களில் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணம் வழங்கப்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை

  • December 23, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவி பணம் வழங்கப்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜெர்மனியில் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதான எதிர்கட்சியான CDU கட்சியானது பல கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. தற்போதைய அரசாங்கமானது நடைமுறப்படுத்திய பேர்கர் கில்ட் என்ற சமூக உதவி பணத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கருத்தை கூறி வருகின்றது. CDU கட்சியுடைய பொது செயலாளர் காசன் லின்னம் அவர்கள் கருத்து வெளியிடுகையில் இந்த பேர்கர் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் கைவிடப்பட்ட மர்ம காரில் 54 கிலோகிராம் தங்கக் கட்டிகள்

  • December 23, 2024
  • 0 Comments

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைவிடப்பட்டிருந்த காரில் 54 கிலோகிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெண்டொரி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் அந்தக் கார் இருந்தது. இதுவரை இல்லாத அளவில் அந்த மாநிலத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறை, போபால் (Bhopal) பொலிஸார் ஆகியவற்றின் அதிகாரிகள் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 41 கோடி ரூபாய் என்று நம்பப்படுகிறது. காரிலிருந்து 10 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று […]

இலங்கை செய்தி

இலங்கையில் பண்டிகைக் காலங்களில் கேக் விலை தொடர்பில் எச்சரிக்கை

  • December 23, 2024
  • 0 Comments

இலங்கையில் பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த வியடம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைவு காணப்படுவதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “பொதுவாக பட்டர் கேக் ரூ.900 – ரூ.1200 இடையே விற்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் பேக்கரி பொருட்களின் […]

இலங்கை செய்தி

இலங்கை: எழுத்தாளர் கைது விசாரணைக்கு இடையே 3 அதிகாரிகள் இடமாற்றம்

  • December 22, 2024
  • 0 Comments

எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹினட்டிகலவை அதுருகிரிய பொலிசார் கைது செய்தமை தொடர்பில், உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுமே தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த ஜெக்சன் அன்டனியின் மருமகனான கசுன் மகேந்திர ஹினட்டிகல, பொலிஸ் தலைமையகத்தில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ரயில் நிலைய விபத்தை கண்டித்து செர்பியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

  • December 22, 2024
  • 0 Comments

செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் நவம்பர் மாதம் 15 பேரைக் கொன்ற ரயில் நிலையக் கூரை இடிந்து விழுந்ததற்கு தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழு வாரங்களுக்கும் மேலாக, வடக்கு நகரமான நோவி சாடில் நடந்த மரணங்களைத் தொடர்ந்து செர்பிய அரசாங்கம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களின் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது. பல எதிர்ப்பாளர்கள் அதிகாரிகள் ஊழல் மற்றும் போதிய கண்காணிப்பு இல்லை என்று குற்றம் சாட்டினர். பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், சம்பவத்தில் பலியான […]

இலங்கை செய்தி

இலங்கை: மேல் மாகாண ஆசிரியர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியீடு

  • December 22, 2024
  • 0 Comments

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது சொந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை பள்ளி நேரம், பள்ளிக்குப் பிறகு, வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் பொருந்தும். மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர் கையொப்பமிட்ட சுற்றறிக்கை. நிஷாந்தி ஜயசிங்க, கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை அனைத்து […]