பொழுதுபோக்கு

கங்குவா படத்தை பார்த்து முக்கிய பிரபலம் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?

  • July 1, 2024
  • 0 Comments

சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். சரித்திர கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு!

  • July 1, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் பார்படோஸில்  கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பார்படோஸ் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியா

இரா. சம்பந்தனின் மறைவுக்கு ​இரங்கல் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி

  • July 1, 2024
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ​​“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவார். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் இடைவிடாமல் […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது

  • July 1, 2024
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் திங்கட்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

உலகம்

அதிகரித்துள்ள போர்ப்பதற்றம்: லெபனானை விட்டு வெளியேற பொதுமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல்

  • July 1, 2024
  • 0 Comments

இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். மேலும் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களையும் முழுமையாக ஒழிக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. இதனால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது. எனவே லெபனானில் வசிக்கும் தனது நாட்டின் குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி சவுதி […]

இலங்கை

இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் போக்குவரத்து சபை எடுத்துள்ள தீர்மானம்!

  • July 1, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பஸ் கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 28 ரூபாவாகும். தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி பஸ் கட்டணத் திருத்தத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்  ஷஷி வெல்கம இதனைத் தெரிவித்தார்.

ஐரோப்பா

பிரான்ஸில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்!

  • July 1, 2024
  • 0 Comments

பிரான்சில் இலகுரக விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸின் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பொழுதுபோக்கு

500 கோடிகளை கடந்து வசூல் மழையில் சாதிக்கும் கல்கி

  • July 1, 2024
  • 0 Comments

பான் இந்தியா ஹீரோவான பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. கல்கி ரிலீஸ் ஆன முதல் நாளே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய இப்படம் பாக்ஸ் […]

வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதில் மிச்செல் ஒபாமாவை களமிறக்கவுள்ள கட்சி!

  • July 1, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, […]

உலகம் செய்தி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் – எரிவாயு விலையில் மாற்றம்

  • July 1, 2024
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.598 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன்படி WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.75 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது.