பொழுதுபோக்கு

தக தகனு மின்னும் சிவப்பு ஆப்பிள் போல வித்தியா பாலன்.. வைரலாகும் வீடியோ

  • May 5, 2024
  • 0 Comments

வித்யா பாலன் பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் தொடங்கி, பாலோ தேகோ (2003) என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்குள் நுழைந்தார். பிறகு இவர் இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார். மேலும் தனது முதல் வணிக […]

ஐரோப்பா

ஐரோப்பாவை அச்சுறுத்திய 13வயது ஹேக்கர்: 11 வருடங்கள் கழித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான ஒரு பிரபல ஹேக்கர், 33,000 சிகிச்சை நோயாளிகளுக்கு அவர்களின் திருடப்பட்ட அமர்வு குறிப்புகளைக் கொண்டு மிரட்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் . ஜூலியஸ் 13 வயதாக இருந்தபோது குற்றச்செயல் தொடங்கியது, அராஜக டீனேஜ் ஹேக்கிங் கும்பல்களின் வலையமைப்பில் அவரை பிரபலப்படுத்தியது. 33,000 சிகிச்சை நோயாளிகளின் பதிவு மொத்தம் 33,000 சிகிச்சை நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டன, மேலும் பின்லாந்தில் ஒரு கிரிமினல் வழக்கில் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் அச்சுறுத்தப்பட்டனர். டஜன் கணக்கான […]

ஐரோப்பா

பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு : பல்பொருள் அங்காடிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 5, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வங்கி விடுமுறை நாளில், பல்பொருள் அங்காடிகள் சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளன. வார இறுதியில் வங்கி விடுமுறையை ஒட்டியதாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே பல்பொருள் அங்காடிகளுக்கு வரவேண்டும் என நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சிலர் கடைகளை திறக்கும் நேரம் மாறுப்படும் என அறிவித்துள்ளனர். Aldi, Asda மற்றும் Tesco ஆகிய பல்பொருள் அங்காடிகள் கடைகளை மூடிய பிறகு யாரும் வரக்கூடாது என்பதற்காக அதன் திறக்கும் நேரத்தை அறிவித்துள்ளன. சில […]

தென் அமெரிக்கா

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஈக்வடார் அழகியை சுட்டு கொலை செய்த மர்ம நபர்கள்!

  • May 5, 2024
  • 0 Comments

ஈக்வடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பராகா கோய்புரோ (23).இவர் 2022-ம் ஆண்டு மிஸ் குவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இதற்கிடையே லாண்டி பராகா ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் சாப்பிடும் ஆக்டோபஸ் செவிச் உணவு பற்றியும், தனது இருப்பிடம் பற்றியும் இன்ஸ்டாகிராமில் பதிவாக வெளியிட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஹோட்டலுக்கு 2 வாலிபர்கள் துப்பாக்கியுடன் வந்தனர். இதில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, மற்றொருவர் லாண்டி பராகா மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த […]

இலங்கை

இலங்கை – மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  • May 5, 2024
  • 0 Comments

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீஸ்ஸ கெசல்வத்த பகுதியில் உள்ள கும்புக்கன் ஓயாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. லுணுகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு நேற்று (05) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோப்டன், லுணுகலை பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கடந்த 3ஆம் திகதி காலை லுணுகலை நகருக்குச் சென்றுவிட்டு இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து உறவினர்கள் நேற்று லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். […]

உலகம்

கென்யாவின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் விமானப்படை பிரதானி நியமனம்..!

  • May 5, 2024
  • 0 Comments

கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.அதாவது மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ வழங்கிவைத்துள்ளார். மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் விமானப் படையின் பிரதானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் ஃபாத்துமா நியமிக்கப்பட்டுள்ளார். கென்யாவின் இராணுவ வரலாற்றில் ஒரு […]

உலகம்

கனடாவில் 600 குழந்தைகளுக்கு தந்தையாகிய மூவர் : தற்போது வந்துள்ள புதிய சிக்கல்!

  • May 5, 2024
  • 0 Comments

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விந்தணு தானத்தின் மூலம் ஏறக்குறைய 600 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர். ப்ரொடக்ஷன் பிக்ஸ்காம் இன்க் என்ற ஆவணப்படத்தில் இந்த நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த மூன்று ஆண்களும் தாங்கள் சேவை செய்வதாக இணையத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு விந்தணுவை தானம் செய்துள்ளனர். பிரச்சினை என்னவென்றால் தற்போது அந்த 600 குழந்தைகள் மரபணுவுடன் தொடர்புடைய நோய்களுக்கு ஆளாகலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது விடயம் என்னவென்றால் மூன்று விந்தணு […]

இந்தியா

சத்தீஸ்கர் – ஆண் நண்பர்களுடன் chatting… கண்டித்த அண்ணனை வெட்டிக்கொன்ற 14 வயது சிறுமி!

  • May 5, 2024
  • 0 Comments

ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசாதே எனக் கண்டித்த தனது சகோதரரை கோடாரியால் 14 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுய்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது சிறுமியுடன் அவரது 18 வயது சகோதரர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது செல்போனில் ஆண் நண்பர்களுடன் சிறுமி நீண்ட நேரம் அரட்டையடிப்பதைக் கண்ட அவரது சகோதரர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த […]

வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையின் நுழைவு வாயில் மீது மோதி விபத்துக்குள்ளான கார் ; பொலிஸார் விசாரணை

  • May 5, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் அதிபர் வசிக்கக்கூடிய வெள்ளை மாளிகை பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது. வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சுவரை ஒட்டி சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கார், திடீரென வெள்ளை மாளிகையின் நுழைவு வாயில் நோக்கி பாய்ந்து வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் அந்த கார், பாதுகாப்பு தடை மீது மோதி நொறுங்கியது. காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

இலங்கை

இலங்கையில் கடலில் ஏற்பட்ட மாற்றம் : கரையோர பகுதிவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 5, 2024
  • 0 Comments

இலங்கையின் கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகள், உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 – 16) வினாடிகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் […]

error: Content is protected !!