இந்தியா

சத்தீஸ்கர் – ஆண் நண்பர்களுடன் chatting… கண்டித்த அண்ணனை வெட்டிக்கொன்ற 14 வயது சிறுமி!

ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசாதே எனக் கண்டித்த தனது சகோதரரை கோடாரியால் 14 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுய்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது சிறுமியுடன் அவரது 18 வயது சகோதரர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது செல்போனில் ஆண் நண்பர்களுடன் சிறுமி நீண்ட நேரம் அரட்டையடிப்பதைக் கண்ட அவரது சகோதரர் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து உறங்கிக் கொண்டிருந்த தனது சகோதரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது சகோதரர் உயிரிழந்துள்ளார்.

இதன்பின் தனது ஆடையில் இருந்த ரத்தக்கறையைச் சுத்தம் செய்து விட்டு தனது சகோதரனை யாரோ கொலை செய்து விட்டதாக அந்த சிறுமி கூறியுள்ளார். ஆனால், பொலிஸார் விசாரணையில் தனது சகோதரரை சிறுமி தான் கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அந்த சிறுமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது தான் வெளி வந்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content