கொழும்பு புறநகர் பகுதியில் கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி
புதிய வைத்தியசாலை வீதியின் கிம்புலாவல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மிரிஹான மற்றும் மடிவெல பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கிம்புலாவல பிரதேசத்தில் இருந்து நவரோஹல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த இருவரும் ஜயவர்தனபுர மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட […]













