பொழுதுபோக்கு

கர்ப்பமாக இருக்கும் சக்காளத்தி.. உண்மையை போட்டு உடைத்த ராதிகா

  • April 24, 2024
  • 0 Comments

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கர்ப்பம் ஆனதை கோபி வீட்டில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் இருப்பவர்களுக்கு ராதிகா மீது சந்தேகம் வரும்படி தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறார். போதாதற்கு புளிப்பான விஷயங்களை தான் விரும்பி சாப்பிடுகிறார். அந்த வகையில் ராதிகாவிடம் நேரடியாக பாக்கியா கேட்கிறார். நீங்க பண்ணுவதெல்லாம் பார்க்கும்பொழுது ஒருவேளை கர்ப்பமாக இருக்கு போல என்று சொல்கிறார். அதற்கு ராதிகாவும் ஆமாம் நான் டெஸ்ட் பண்ணி டாக்டர் […]

உலகம்

2024 சிறந்த மகளிர் புனைகதையை தேர்ந்தெடுக்கும் இறுதி போட்டி : முன்னணியில் உள்ள இரு நாவல்கள்!

  • April 24, 2024
  • 0 Comments

புனைகதைக்கான 2024 மகளிர் பரிசுக்கான ஆறு இறுதிப் போட்டியாளர்களில் இடம்பெயர்வு பற்றிய சிக்கலான மற்றும் ஆச்சரியமான கதைகளைச் சொல்லும் இரண்டு நாவல்கள் முன்னணியில்  உள்ளன. யு.எஸ்.-பிரெஞ்சு எழுத்தாளர் ஆபே ரெய் லெஸ்குயரின் முதல் நாவலான “ரிவர் ஈஸ்ட், ரிவர் வெஸ்ட்” சீனாவில் உள்ள அமெரிக்கர்களின் கதையின் மூலம் மேற்கிலிருந்து கிழக்கு குடியேற்றத்தை சித்தரிக்கிறது. அதே சமயம் பிரிட்டிஷ் எழுத்தாளர் இசபெல்லா ஹம்மாட்டின் “என்டர் கோஸ்ட்” ஷேக்ஸ்பியர் நடிகையின் சிக்கலான தாய்நாட்டிற்கு திரும்பியதை பட்டியலிடுகிறது. 30,000 பவுண்டுகள் ($37,000) […]

இலங்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • April 24, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24.04) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்  மொண்டகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி  சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். விசாரணை முடியும் வரை இந்த நிரந்தர தடை அமலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தீவிரமடையும் பாலஸ்தீன ஆரதரவு போராட்டங்கள்

  • April 24, 2024
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளார். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. காசா மீதான போரை கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 18ம் திகதி கொலம்பியா பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். […]

இலங்கை

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

  • April 24, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது . இத்திட்டம் , மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராகவும் பொருளாதார தடை விதிக்கும் அபாயம் : அமெரிக்கா எச்சரிக்கை!

  • April 24, 2024
  • 0 Comments

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது 3 நாள் பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (24) இலங்கை சென்றதை அடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது, ​​பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. ஈரான் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் சிறுவனுக்கு கிடைத்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க வளையல்!

  • April 24, 2024
  • 0 Comments

இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பழைய காலத்து வளையலை கொண்டு போய் தனது தாயிடம் கொடுத்துள்ளான். அதை வாங்கிய அவனது தாய் இது பழைய வளையல் என்று குப்பையில் வீச நினைத்தார். ஆனாலும் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இதனால் அந்த வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. […]

இலங்கை

இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி

  • April 24, 2024
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வந்தடைந்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது. அம்பாந்தோட்டை […]

தமிழ்நாடு

தமிழ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம் – 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் வீசப்பட்ட 4 நாய்க்குட்டி

  • April 24, 2024
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தாயிடமிருந்து பிரித்து ஈவு இரக்கமில்லாமல் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் வீசப்பட்ட நான்கு நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறை வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கிராமத்தினரிடம் ஒப்படைத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தில் உள்ள ஒரு கிணற்றில் நாய்க்குட்டிகளின் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்தப் பகுதியினர் கிணற்றில் பார்த்தபோது நான்கு நாய்க்குட்டிகள் கிணற்றுக்குள் விழுந்து வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை எடுத்து இது […]

தமிழ்நாடு

சென்னையில் கோர விபத்து – பெண் பலி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை

  • April 24, 2024
  • 0 Comments

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பத்மபிரியா சம்பவ இடத்திலேயே பலி ஐந்து வயது குழந்தையும் அவரது தந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடப்பொய்கை திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ரயில்வேயில் டெக்னிசியனாக வேலை பார்க்கும் பாலநாராயண சிங் தனது மனைவி பத்மபிரியா ஐந்து வயது மகள் ஹரிதா உடன் கடந்த ஞாயிறு அன்று காரில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை,மற்றும் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி […]

error: Content is protected !!